வெள்ளி, 28 மே, 2010

மலேசியாவில் எங்கள் ஆட்சி அமைந்தால் விடுதலைப் புலிகளுக்கு அங்கீகாரம் அளிப்போம பினாங்கு மாநில துணை முதல்வர் ்

டெல்லி: இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசிய மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் ராமசாமி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

மலேசிய அரசுக்கு இந்தக் கோரிக்கையை இந்தியா விடுத்துள்ளது.

சீமானின் நாம் தமிழர் அரசியல் மாநாடு மதுரையில் மே 18ம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ் ஆர்வலர்களும், ஈழ மக்களுக்கான பல்வேறு அமைப்புகளும் பங்கு கொண்டன.

மேலும் மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாகக் கூறப்படுகிறது.

"மலேசியாவில் எங்கள் ஆட்சி அமைந்தால் விடுதலைப் புலிகளுக்கு அங்கீகாரம் அளிப்போம்" என்று அவர் பேசியதாக உளவுத்துறை குறிப்பு தெரிவிக்கிறது.

இது குறித்து இந்திய உளவுத்துறை மத்திய அரசுக்கு விரிவான அறிக்கையை அளித்தது. இதையடுத்து இந்த குறிப்புகள் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில், இந்திய வெளியுறவுத்துறை இந்த குறிப்புகளை மலேசிய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. மேலும், அத்துடன் ஒரு கோரிக்கை கடிதமும் அனுப்பியுள்ளது.

அதில், இந்திய இறையாண்மைக்கு எதிராக பினாங்கு துணை முதல்வர் ராமசாமி பேசியுள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பதிவு செய்தவர்: பெருமுக்குரிய நாடு என் நாடு
பதிவு செய்தது: 28 May 2010 4:45 pm
இந்தியாவுக்கு மனநோயும் பிடிக்க வில்லை மான நோயும் பிடிக்கவில்லை, இந்தியா நினைத்திருந்தால் 1990 லே விடிதலை புலிகளை ஒழித்து பிரபாகரனை கைவிலங்கிட்டு இந்தியாவுக்கு கொண்டுவந்திருக்கும்... தன வினை செய்தவன் தானே அழியட்டும் என்று விட்டுவிட்டது அவ்வளவுதான்... ஆனால் இந்தியா என்ற நாட்டில் கண்ட கண்ட நாய்கள் வந்து பிரபாகரன், விடுதலை புலிகள் என்று குறைக்ககூடது...

பதிவு செய்தவர்: வேதை தமிழன்
பதிவு செய்தது: 28 May 2010 4:36 pm
மலேசிய துணை முதல்வர் ஒரு டுபாக்கூர் பேர்வழி மலேசியாவில் வேலைக்கு போன இந்திய தமிழர்களை சம்பளம்கூட கொடுக்காமல் நாயை விட கேவலமாக நடத்தி சம்பளம் கேட்டால் அங்கு உள்ள தமிழ் ரவுடிகளை வைத்து அடித்து துன்புறுத்தும் தமிழர்களை ஒன்றுமே கூறாதவர். படகில் போன இலங்கை தமிழர்களை siraiyil adaitthu kodumai padutthum malasia arasai ethikkathavar ivar ethai parrum pesa arukathai illai

கருத்துகள் இல்லை: