புதன், 26 மே, 2010

இலங்கைக்கான விசா அனுமதியினை தளர்த்துவதற்கு மலேசியா தீர்மானம் எடுத்துள்ளது.

இலங்கைக்கான விசா அனுமதியினை தளர்த்துவதற்கு மலேசியா தீர்மானம் எடுத்துள்ளது. இந்நிலையில், இலங்கையிலிருந்து மலேசியா ஊடாக பயணத்தை மேற்கொள்ளும் பயணிகள் விசா அனுமதியின்றி பயணத்தை மேற்கொள்ள முடியும் என மலேசியாவின் பிரதி பிரதமர் ரன் சிறீ முஹ்யிட்டின் யச்சின் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூலைமாதம் முதலாம் திகதிமுதல் இதனை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், இலங்கைக்கு மாத்திரமின்றி பாகிஸ்தான், இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்குமான விசா நடைமுறையில் தளர்வு ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் மலேசியாவின் பிரதி பிரதமர் குறிப்பிட்டுள்ளார். மலேசியாவில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கிலேயே இந்த விசா நடைமுறையில் தளர்வு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை: