புதன், 26 மே, 2010

விடுமுறை தினங்களில் தனியார் வகுப்புக்கள் நடத்துவதைத் தடை

மாணவர்களின் அறநெறிக் கல்வி மேம்பாட்டுக்காக ஞாயிறு மற்றும் போயா விடுமுறை தினங்களில் தனியார் வகுப்புக்கள் நடத்துவதைத் தடை செய்வதற்கு ஊவா மாகாண சபை தீர்மானித்துள்ளது.அடுத்த மாதம் முதல் இந்த தடை அமுலுக்கு வருமென ஊவா மாகாண ஆளுநர் நந்தா மெத்யூ தெரிவித்தார்.

ஞாயிறு மற்றும் போயா தினங்களில் தனியார் வகுப்புக்கள் நடத்துவதால் அறநெறிப் பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்வது பாதிக்கப்படுகிறது.மாணவர்கள் அறநெறிப் பாடசாலைகளுக்குச் செல்வதை ஊக்குவிக்கும் வகையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக ஊவா முதலமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ, பல மாதங்களாக சம்பந்தப்பட்ட தரப்புடன் ஆராய்ந்தார். இதன்படி நேற்று முன்தினம் மாகாண சபையின் மாதாந்தக் கூட்டத்தில் யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: