திங்கள், 15 நவம்பர், 2021

உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் தனித்து போட்டி! பிரியங்கா காந்தி உறுதி

தினமலர் : புலந்த்ஷர்: உ.பி.,யில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச்செயலர் பிரியங்கா கூறியுள்ளார்.
உ.பி.,யில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் பா.ஜ., மற்றும் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகின்றன. காங்கிரசை தயார் படுத்தும் வகையில், பிரியங்கா அம்மாநிலத்திற்கு அடிக்கடி சென்று பல்வேறு கூட்டங்கள், பேரணிகளில் பங்கேற்று வருகிறார்.


இந்நிலையில் புலந்த்ஷரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரியங்கா பேசியதாவது: வரும் சட்டசபை தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க வேண்டாம் என ஏராளமான கட்சி தொண்டர்கள் என்னிடம் கேட்டு வருகின்றனர். அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிடும்; எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது என்பதை உறுதியுடன் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி தாய் ராம்ரதி உடல் நலம் பாதிக்கப்பட்டு டில்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று அவர் காலமானார். இந்நிலையில், மாயாவதியை சந்தித்த, பிரியங்கா அவருக்கு ஆறுதல் கூறினார்.
 

கருத்துகள் இல்லை: