சனி, 27 நவம்பர், 2021

இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்கள் உ பி, ம பி , பீகார், ஜார்கண்ட் - நிதி ஆயோக் அறிக்கை

இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்கள் இவைதான்- நிதி ஆயோக் அறிக்கை வெளியீடு

மாலைமலர் : ஏழ்மையான மக்கள் தவிர ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் அதிகம் உள்ள மாநிலங்களிலும் பீகார் முதலிடத்தில் உள்ளது.
புதுடெல்லி:  நாட்டில் கல்வி, சுகாதாரம், அன்றாட வாழ்க்கை நிலை, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் நிலவும் வறுமை தொடர்பாக நிதி ஆயோக் ஆய்வு செய்து தனது முதல் அறிக்கையை (பல பரிமாண வறுமை குறியீடு) வெளியிட்டுள்ளது.
அதில், நாட்டில் மிகவும் ஏழ்மையான மாநிலங்கள் பட்டியலில் பீகார், ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பீகார் மாநிலத்தில் 51.91 சதவீத மக்கள் ஏழைகளாக உள்ளனர். ஜார்க்கண்டில் 42.16 சதவீத மக்களும், உத்தர பிரதேசத்தில் 37.79 சதவீதம் மக்களும் வறுமையில் உள்ளனர்.


இந்த மாநிலங்களைத் தொடந்து மத்திய பிரதேசம் 36.65 சதவீதம், மேகாலயா (32.67 சதவீதம்) ஆகிய மாநிலங்கள் முறையே 4 மற்றும் 5வது இடத்தில் உள்ளன. தமிழகத்தில் 4.89 சதவீத மக்கள் வறுமையில் உள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

இதேபோல் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் அதிகம் உள்ள மாநிலங்களிலும் பீகார் முதலிடத்தில் உள்ளது. ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் அடுத்த இடங்களில் உள்ளன.

தாய்மார்களின் ஆரோக்கியம், பள்ளிப்படிப்பு, பள்ளி வருகை, சமையல் எரிபொருள் மற்றும் மின்சார பயன்பாடு ஆகியவற்றிலும் பீகார் மிக மோசமான இடத்தில் உள்ளது.


கருத்துகள் இல்லை: