சனி, 17 ஏப்ரல், 2021

நடிகர் விவேக் மரணம் தடுப்பூசி தான் காரணம்? 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை !

நடிகர் விவேக்கின் உடல் நிலையை எந்த வித ஆய்வுக்கும் உட்படுத்தாமல் தடுப்பூசி போட்டமையே இறப்புக்கு காரணம் என்று தெரியவருகிறது!

மேலும் தடுப்பூசியை முழு டோஸாக போடாமல் பகுதி பகுதியாக போட்டிருந்தால் கூட இந்த இறப்பு தவிர்த்திருக்க முடியும் என்று உறுதியாக தெரியவருகிறது .      மக்களை தடுப்பூசி போடுவதற்கு தூண்டுவதற்காக நடிகர் விவேக்கின் உதவியை நாடிய தமிழக அரசு அவரின் உடல் நிலைபற்றி விசேஷ கவனம் எடுக்கவும் தவறி விட்டது 

தடுப்பூசியை பகுதியாக செலுத்தப்படக்கூடிய வாய்ப்பை பற்றியும் ஆராயவில்லை தங்களின் பிரசாரம் ஒன்றை மட்டுமே கவனத்தில் கொண்டு இந்த அநியாயத்தை தமிழக அரசு செய்துள்ளது. maalaimalar :சென்னையில் வசித்து வந்த நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக நேற்று (ஏப்.16) காலை 11 மணியளவில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவமனையில் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று (ஏப்.17) அதிகாலை 4.35 மணியளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து அவரின் உடல் விருகம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு அவரது நண்பர்கள், திரைத்துறை பிரபலங்கள், நடிகர்கள், நடிகைகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.


இதையடுத்து மாலை 4 மணியளவில் விருகம்பாக்கத்தில் இருந்து, மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள மின்மயானத்திற்கு அவரது உடல், ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
விவேக்கின் உடலுக்கு காவல்துறை மரியாதை செலுத்திய போது எடுத்த புகைப்படம்

விவேக்கின் புகழுக்கு பெருமை சேர்க்க, அவரது கலை, சமூகச் சேவையை கெளரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன், அவரது உடலை அரசு தகனம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தது. 

அதன்படி நடிகர் விவேக்கின் உடலுக்கு, 78 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை அளிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறை சார்பில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து விவேக்கின் உடலுக்கு அவரது மகள் இறுதிச் சடங்குகளை செய்தார். பின்னர் நடிகர் விவேக்கின் உடல், மேட்டுக்குப்பத்தில் உள்ள மின்மயானத்தில் எரியூட்டப்பட்டது.

கருத்துகள் இல்லை: