சனி, 27 ஜூலை, 2019

நோயாளி மிரட்டினார் உறவு கொண்டேன் - மவுனம் கலைந்த கனடா டாக்டர் தமிழ் டாக்டர்


Jeyalakshmi tamil.oneindia.com/ :  மவுனம் கலைந்தார் கனடா மருத்துவர் தீபா சுந்தரலிங்கம்- டொராண்டொ: சிகிச்சைக்கு வந்த நோயாளி என்னை மிரட்டினார், ஆபாசா செல்பிக்களை அனுப்பச்சொன்னார், எஸ்எம்எஸ்களை மருத்துவக் கவுன்சிலுக்கு அனுப்பிவிடுவதாக மிரட்டியே பாலியல் உறவு கொள்ள வைத்தார் என்று புற்றுநோய் மருத்துவரான தீபா சுந்தரலிங்கம் தனது தரப்பு வாதத்தை முன் வைத்துள்ளார்.
கனடாவின் டொராண்டோ மருத்துவமனையில் டாக்டராக பணியில் இருந்த போது புற்றுநோய் சிகிச்சைக்கு வந்த நோயாளியுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் கடந்த ஜனவரியில் அவரது மருத்துவர் உரிமம் பறிக்கப்பட்டது.
தற்போது தன்மீதான குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார். தீபா சுந்தரலிங்கத்திற்கு 37 வயதாகிறது. புற்றுநோய் சிகிச்சை பிரிவில் ஸ்பெசலிஸ்ட். 2010 முதல் மருத்துவராக இருக்கும் தீபாவிடம் சிகிச்சை பெற கடந்த 2015ஆம் ஆண்டு நோயாளி ஒருவர் வந்தார்.
அவரை நோயாளி என்பதை விட விதி என்றே சொல்ல வேண்டும்.
விதி வடிவத்தில் வந்த அந்த நோயாளிக்கு புற்றுநோய் தாக்கம் இருந்தது.
அதுமுதலே இருவரும் பழகி வந்துள்ளனர் என்றும் வெளியில் சுற்றியுள்ளனர் என்றும் கூறப்பட்டது. வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் தகவல்களை பரிமாறிக்கொண்டார் என்றும் புற்று நோய்க்கு தீபா சிகிச்சை அளித்தார் என்றும் கூறப்பட்டது. 2015ஆம் ஜனவரி முதல் 2016 மார்ச் வரை 23 முறை சிகிச்சை அளித்தார். இருவரும் நெருக்கமாக இருந்த நிலையில் திடீரென தான் சிகிச்சை அளிக்கும் நோயாளிகள் லிஸ்ட்டில் இருந்த அந்த நோயாளியின் பெயரை நீக்கினார் தீபா. அதன்பின்னர்தான் விதி தீபாவின் வாழ்க்கையில் விளையாடியது.

டாக்டர் மீது குற்றச்சாட்டு தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டார் என்றும் சிகிச்சைக்கு வந்த போது தன்னுடன் உறவு கொண்டார் என்றும் தீபா மீது அந்த நோயாளி குற்றச்சாட்டை முன் வைத்தார். தன்னை வெட்டி விட்டு விட்டதாகவும் வேறொரு நபரை காதலிப்பதாக கூறிய அவர் தன்னை நோயாளிகள் லிஸ்ட்டில் இருந்தே நீக்கிவிட்டதாகவும் கூறினார். பாலியல் குற்றச்சாட்டு பாலியல் குற்றச்சாட்டு தீபா மீது சிபிஎஸ்ஓ எனப்படும் College of Physicians and Surgeonsல் புகார் அளித்த அந்த நோயாளி, நான் உடல் ரீதியாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் பாதிக்கப்பட்டு உள்ளேன். ஒரு முக்கியமான உறவு இழப்பு என்னை பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது. தீபா என்னை விட்டு விலகியதோடு மட்டுமல்லாமல் எனக்கு சிகிக்சை அளிக்கவும் மறுத்து விட்டார் எனவும் தனது தரப்பிலான புகாரை அறிக்கையாக சமர்பித்தார்.

தீபா மருத்துவர் உரிமம் ரத்து இது தொடர்பான விசாரணை நடைபெற்றது. அப்போது தீபா மீது குற்றம் சுமத்திய நோயாளியின் குரல் மட்டுமே ஒலித்தது. அத்தனையும் கேட்டுக்கொண்டிருந்த தீபா மவுனமாகவே இருந்தார். பதில் எதுவும் பேசவில்லை. குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தீபாவின் மருத்துவ உரிமம் ரத்து செய்யப்பட்டதோடு அபராதமும் விதிக்கப்பட்டது. இதனையடுத்து கனடாவில் இவர் மருத்துவராக சிகிச்சை அளிக்க முடியாது.

நீதிமன்றத்தை அணுகிய தீபா ஆறு மாதங்கள் கழித்து டாக்டர் தீபா தனது தரப்பு நியாயத்தினை முன் வைத்துள்ளார். அதாவது நடந்த சம்பவத்தில் தான் குற்றவாளி அல்ல என்றும் பாதிக்கப்பட்டவரே தான்தான் என்றும் அவர் கூறியுள்ளார். தன்னை உணர்வு ரீதியாக கட்டுப்படுத்தி அந்த நோயாளி பயன்படுத்திக்கொண்டார் என்றும் ஆபாச செல்பிக்களை மிரட்டி அனுப்ப வைத்தார் என்றும் முறையிட்டுள்ளார்.

 தன்னுடன் உறவு கொள்ளாவிட்டால் தான் அனுப்பிய எஸ்எம்எஸ், படங்களை மருத்துவ கவுன்சிலுக்கு அனுப்பி விடுவதாகவும் தான் மிரட்டப்பட்டதாகவும் தீபா கூறியுள்ளார். அவமானத்தினால் தான் கூனி குறுகிப்போய் நின்றதால்தான் பேசமுடியவில்லை என்றும் தனது தரப்பு நியாயத்தையும் நீதிமன்றம் கேட்கவேண்டும் என்றும் நீதிமன்றத்தில் தீபா முறையிட்டுள்ளார்.
இதுநாள்வரை நோயாளி தரப்பிலான குற்றச்சாட்டினை பார்த்த மருத்துவத்துறை தீபா தரப்பு நியாயத்தையும் பார்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது


கருத்துகள் இல்லை: