திங்கள், 22 ஜூலை, 2019

ஜெயலலிதா உடம்பில் ஈகொலாய் பக்டீரியா .. அதிர்ச்சி அறிக்கை ?


ராஜா ஜி : இன்று காலையில் பதைபதைக்கும் கடைசி நாட்கள் என ஜெயலலிதா இறப்பு குறித்தான டாக்குமென்ரி-
2016 செப்டம்பர் 22 அப்பல்லோ செல்லும் வரையான 6 மாத ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா, மரு.சிவகுமார் மற்றும் அப்பல்லோ மருத்துவர்கள் கூறியதாக ஓடிற்று.
ஜெயலலிதா உடம்பில் ஈ.கோல் பாக்டீரியா, அது கழிவறையிலும் செப்டிக் டேங்கிலும் காணப்படும் பாக்டீரியா!
2014 சொத்துக்குவிப்பு வழக்கு தண்டனைக்குப் பிறகான மன உளைச்சலில் மலம், சிறுநீர் கழிப்பது கட்டுப்பாடு இல்லாம போய், டயாப்பர் பயன்படுத்தும் சூழல்.
கணத்த உடல், ஒவ்வாமை வேறு.
டயாப்பர் மூலமாக மலத்தில் காணப்படும் ஈகோல் பாக்டீரியா சிறுநீர் பாதை வழியே உடலுக்குள் சென்று, இரத்தத்தில் கலந்து என போகிறது மருத்துவ அறிக்கை.
பார்க்கவே பரிதாபமாக....

கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லையென்று சொல்லும் போது மமதையாக தெரிந்த ஜெயலலிதாவின் பிம்பம் சுக்குநூறாக உடைந்தது.
அவரது உணவு, வாழ்வுமுறை, சுற்றம் என தனித்து தீவுகளில் வாழ்ந்து ரகசியமாக செத்துப் போனார் ஜெயலலிதா!

ஒரு வருடமாக நடமாட்டம் குறைந்து, நிற்கக்கூட, நகரக்கூட இயலாமல், அமைச்சரவையை கூட்டாமல், சென்னை பெருவெள்ளத்தை கணித்து தடுக்க ஆலோசிக்காமல், தன்னையும் கவனிக்காமல், மக்களையும் கவனிக்காமல் செத்துப்போனார்.
இடையே 2016 தேர்தலில் வெற்றியும் பெற்றார்.
உண்மையை சொல்லாமல் விட்ட நீதி மன்றங்கள், ஊடகங்கள், அறிவுஜீவிகள் என அனைவரும் மூடிமறைத்து நாட்டை நாசம் செய்தார்கள்.
தெய்வம் நின்று கொன்றது ஊழலுக்காக இல்லை!
தெய்வமும் இல்லை!
தானே வரவழைத்த சாவு.
தானும் பரிதாபமாக செத்தார்.
அடிமைகள் கையில் ஆட்சியை கொடுத்து நம்மையும் சாகடித்தார்.
மீளாத்துயர் தமிழகத்துக்கு உண்மை எப்போது தெரியும்?
உண்மையை மறைத்த கயவர்களின் கயமை எப்போது வெளிப்படும்?
பட்டறிவும் படிப்பறிவும் கூடியுள்ள தமிழர்களுக்கு பகுத்தறிவு எப்போது வரும்

கருத்துகள் இல்லை: