செவ்வாய், 23 ஏப்ரல், 2019

தினமலரின் பார்ப்பன ஜாதி வெறி ..லாலு பிரசாத் யாதவ் அவர்களை அவன் இவன் என்று ஏகவசனத்தில் பதிவிட்டு உள்ளது

தினமலருக்கு சமுகவலையில் பதிலடி
கலி. பூங்குன்றன் : பார்ப்பன தினமலரின் பூணூல் கொழுப்பைப் பாரீர்!
லாலுவை அவன் இவன் என்று எழுதும் 'ரவுடிசம்!'
மத்தியில் பி.ஜே.பி. ஆட்சியும், மாநிலத்தில் அதன் தொங்கு சதையும் அதிகாரத்தில் இருக்கும் சூழ்நிலையில், காவிகளுக்கும், பார்ப்பனர்களுக்கும் பூணூல்கள் எல்லாம் முட்டும் கொம்புகளாகத் துருத்திக் கொண்டு கிளம்பிவிட்டன.
நேற்றைய தினமலர்' (22.4.2019, பக்கம் 9)
"லாலுவை சந்திக்க அனுமதி மறுப்பு'' என்ற தலைப்பிட்டு வந்துள்ள செய்தியைப் படிப்பவர்களுக்கு குருதிக் கொதிப்பு ஏற்பட்டு இருக்கும்.
பீஹார் முன்னாள் முதல்வரான லாலுபிரசாத் கால்நடை தீவன வழக்குகளில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தான்.
உடல்நலக் குறைவு ஏற்பட்டு ராஞ்சியில் உள்ள, ராஜேந்திரா மருத்துவ அறிவியல் மைய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
என்று மேனாள் முதலமைச்சரை, மேனாள் மத்திய அமைச்சரை, ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தோற்றுநரை, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு மூத்த தலைவரை - பார்ப்பனர் அல்லாதவர் என்ற ஒரே காரணத்துக்காக அவன் - இவன் என்று எழுதுகிறது என்றால், இதைக் கண்டும் காணாமலும் இருக்க முடியுமா? சிந்தியுங்கள்! செயல்படுங்கள்!!

கருத்துகள் இல்லை: