வியாழன், 6 அக்டோபர், 2016

மும்பை கால்சென்டர் அமெரிக்கர்களிடம் பண மோசடி; 70 பேர் கைது

தானே : மஹாராஷ்டிராவில், 'கால் சென்டர்'கள் மூலம், அமெரிக்க நாட்டினரை
ஏமாற்றி, கோடிக் கணக்கான ரூபாய் மோசடி செய்த, 70 பேரை போலீசார் கைது செய்தனர்; 600க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு மஹாராஷ்டிர மாநிலம், மும்பை புறநகர் பகுதியை சேர்ந்த, 'கால் சென்டர்' மூலம், அமெரிக்க நாட்டை சேர்ந்த பலர், பண மோசடிக்கு ஆளானதாக புகார் எழுந்தது. இதையடுத்து, தானே மாவட்டம் மிரா ரோடு பகுதியில், மூன்று கால் சென்டர்களில், தானே போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து, போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங் கூறியதாவது:
மிரா ரோடு பகுதியில் உள்ள மூன்று கால் சென்டர்களில், 20 முதல் 30 வயதுக்குட்பட்ட, 600க்கும் அதிகமானோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, அமெரிக்கர்கள் பேசுவது போன்ற ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

அதன் பின், அமெரிக்க நாட்டினரை,  போனில் தொடர்பு கொண்ட  இவர்கள், தங்களை அமெரிக்க வருமான வரித்துறை அதிகாரிகள் எனக்உள்ளனர். >இதன்படி, கால் சென்டர் மூலம், ஒரு நாளைக்கு, 1.5 கோடி ரூபாய் வரை, பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். ஓராண்டுக்கும் மேலாக இந்த மோசடி நடந்து வந்துள்ளது. "
அமெரிக்க உளவுத்துறையிடமிருந்து வந்த புகாரின் அடிப்படையில், 'ரெய்டு' மேற்கொள்ளப்பட்டது. அதில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. <இதுவரை, 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பணியாற்றிய, 600க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய பலரை தேடி வருகிறோம். 22 முதல் 28 வயதுக்குள்ளான இளைஞர்கள், இந்த கால் சென்டரை நடத்தி வந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. <>இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: