புதன், 5 அக்டோபர், 2016

கோவை கலவரம் : பா.ஜ.வினர் 3 பேர் கைது

கோவை: கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் (36) கடந்த மாதம் 22ம் தேதி வெட்டிக்கொல்லப்பட்டார். முன்னதாக, சசிகுமார் வெட்டுக்காயங்களுடன் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி கிடைத்ததும் மருத்துவமனையில் திரண்டிருந்த சிலர், வரவேற்பு அறை கண்ணாடியை உடைத்தனர்.

 இதுதொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், நேற்று கவுண்டம்பாளையத்ைத சேர்ந்த அசோக்குமார் (30) என்பவரை கைது செய்தனர். இதேபோல், கடந்த மாதம் 23ம் தேதி சசிகுமார் இறுதி ஊர்வலத்தின்போது காந்திபுரம் பகுதியில் அரசு பஸ்களை கல்வீசி தாக்கினர். இதுதொடர்பாக, ரஞ்சித்குமார் (30), கஜேந்திரன் (30) ஆகிய 2 பா.ஜ.க.வினரை நேற்று கைதுசெய்தனர் தினகரன்,காம்

கருத்துகள் இல்லை: