செவ்வாய், 30 டிசம்பர், 2014

RSS தலித் பாசம்? இஸ்லாமியர்களுக்கு எதிராக அவர்களை யூஸ் பண்ணத்தாய்ன்?

பையாஜி ஜோஷி

 ஒருகாலத்தில் அவர்ணர்களாக சமுதாயத்திற்கு வெளியே நிற்கவைக்கப்பட்ட தலித்துகளையும் பழங்குடியினரையும் இன்றைக்கு “நீங்களும் இந்துக்கள் தான்” என்று அழைப்பதே அப்பாவி இசுலாமியர்களுக்கு எதிராக கொலைவாளை ஏந்தும் கூலிகளாக அவர்களை அமர்த்திக் கொள்வதற்காகத் தான்.
முசுலீம் ஆட்சியாளர்களும் மாட்டுக் கறி தின்பவர்களுமான அந்நிய படையெடுப்பாளர்கள் சன்வார்வன்ஷிய ஷத்ரியர்களின் ஹிந்து பெருமிதத்தை உடைப்பதற்காக மாட்டைக் கொல்வது, அதன் தோலை உரிப்பது, அதன் மீதங்களை கண்காணாத இடத்தில் எறிவது போன்ற கீழ்த்தரமான வேலைகளைச் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தினார்கள். பெருமிதம் மிக்க ஹிந்து கைதிகளுக்கு இந்த மாதிரியான வேலைகளைக் கொடுத்ததன் மூலம் தோலை உரிக்கும் (charma-karma) சாதி என்ற பிரிவையே அந்நியப் படையெடுப்பாளர்கள் தான் உண்டாக்கினர்” – இது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அதிகார வரிசையில் இரண்டாம் இடத்திலிருக்கும் அதன் பொதுச் செயலாளர் பையாஜி ஜோஷியின் வார்த்தைகள். சகல ஜாதி கொடுமைகளுக்கும் மூல காரணம் பார்ப்பான்தான் !ஆனால் அதே  பார்ப்பான் ஒதுங்கி நின்று சேதாரம் இல்லாம  கூத்து பார்ப்பான்


மற்றொரு முக்கிய ஆர்.எஸ்.எஸ் தலைவரான சுரேஷ் சோனி, “தலித்துகளின் துவக்கம் என்பது துருக்கிய, இசுலாமிய மற்றும் முகலாய சகாப்தத்தில் உள்ளது. இன்றைக்கு இருக்கும் வால்மீகி, சுதர்ஷன், மஜ்ஹாபி சீக்கியர்கள் மற்றும் அதன் 624 உட்கிளைகளும் பிராமணர்கள் மற்றும் ஷத்ரியர்களின் மேல் நிகழ்த்தப்பட்ட மத்திய கால அல்லது இசுலாமிய கால கொடுங்கோன்மையின் விளைவுகளே” என்கிறார்.
பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் விஜய் சோன்கர் ஷாஸ்த்ரி எழுதி கடந்த செப்டம்பர் மாதம் வெளியான மூன்று நூல்களுக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் எழுதிய முன்னுரைகளில் தான் மேலே உள்ள வியாக்கியானங்கள் இடம்பெற்றுள்ளன. ’ஹிந்து சர்மாகார் ஜாதி, ஹிந்து கத்திக் ஜாதி, ஹிந்து வால்மீகி ஜாதி’ என்ற மூன்று நூல்களின் பேசு பொருட்களும் மேலே உள்ள முன்னுரை பகுதியின் விரிவாக்கம் தான்.
மத்திய காலத்திற்கு முன் சூத்திர ஜாதியார் தீண்டத்தகாதவர்களாக கருதப்படவில்லை என்றும், முசுலீம் படையெடுப்பு மற்றும் இசுலாமிய கொடுங்கோன்மைகளுக்குப் பின் வந்த காலத்தில் தான் தலித்துகள், இந்திய முசுலீம்கள் மற்றும் ஆதிவாசிகள் உருவாகினர் என்றும், அதன் பிறகே தீண்டாமை இந்திய சமூகத்திற்கு அறிமுகம் ஆனது என்பதே மேற்கண்ட நூல்களின் சாரமான வாதங்கள்.
இந்திய வரலாறு பற்றியோ, பார்ப்பனிய சனாதன தர்மம் குறித்தோ, பார்ப்பனிய பாசிச அரசியலைப் பற்றியோ எந்த அறிமுகமும் இல்லாத நண்பர் ஒருவரிடம் மேலே உள்ள வியாக்கியானங்களை சொல்லிக் கொண்டிருந்தேன். அவர் ’பாமரத்தமான’ கேள்வி ஒன்றை முன்வைத்தார்.
தலையில் தண்ணி தெளித்தல்
“பார்ப்பானுக வழக்கமா செய்யிற மாதிரி ஓரு யாகத்த நடத்தி தலையில தண்ணி தெளிச்சி தீட்டுக் கழிச்சி தீண்டக் கூடியவங்களா மாத்தியிருக்கலாம்லெ?”
”சரி ஒரு பேச்சுக்காக பாய்ங்க தான் மாட்டைக் கொல்ல வச்சி தலித்துகளை உருவாக்கி தீண்டாமையை கொண்டாந்தாங்கன்னே வச்சிக்கலாம். இவங்க பார்ப்பானுக வழக்கமா செய்யிற மாதிரி ஓரு யாகத்த நடத்தி தலையில தண்ணி தெளிச்சி தீட்டுக் கழிச்சி தீண்டக் கூடியவங்களா மாத்தியிருக்கலாம்லெ? பொண்ணு குடுத்து பொண்ணு எடுத்திருக்கலாம்லே? ஆனா இவய்ங்க பாய்ங்க செஞ்ச ‘கொடுமைய’ ஏத்துக்கிட்டாய்ங்க. அப்படின்னா அந்தக் ‘கொடுமை’ இவய்ங்களுக்கு ரொம்ப ‘இன்பமான கொடுமையா’ இருந்திருக்கும் போலயே?”
இப்படி ‘மேலோட்டமாக’ சிந்திக்கும் ‘பாமரர்கள்’ ஏராளமானோரை ஈரோட்டுக் கிழவன் தமிழ்ச் சமூகத்திற்கு கொடையளித்து விட்டுச் சென்றிருப்பதாலேயே உள்ளொளியின் நுண்ணுணர்வு மிக்கவர்கள் தமிழர்களின் மேல் தீராத வெறுப்பில் உழல்கிறார்கள். போகட்டும்.
“சதுர் வர்ணம் மயா சிருஷ்டம்” அதாவது, நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன் என்று பகவத் கீதையில் பெருமை பீத்துகிறான் மாயக் கண்ணன். பல்லாயிரம் சாதிகளை உள்ளடக்கிய நான்கு பிரதான வர்ணங்களும் பிரம்மாவின் எந்தெந்த உறுப்புகளில் இருந்து பிறந்தார்கள் என்று பட்டியலிடுகிறது புருஷ ஸூக்தம். பிராம்மண, ஷத்ரிய, வைஸ்ய மற்றும் ஷூத்ர என்ற நான்கு வர்ணங்களால் வடிவமைக்கப்பட்ட சமுதாய அமைப்பிற்கு வெளியே இருந்த பழங்குடியினர் பற்றி ரிக்வேதத்தில் குறிப்புகள் உள்ளன.
மனு உள்ளிட்ட ஸ்மிருதிகள் வர்ணங்களின் கீழ் வருவோருக்கான தெளிவான சட்ட விதிமுறைகளை வகுத்துக் கொடுத்துள்ளன. சமூகத்தை மேலோர் கீழோர் என்று கோடு கிழித்துப் பிரித்துப் போட்டதோடு அல்லாமல், யாரை யார் மணக்கலாம், யார் செத்தால் யார் தூக்க வேண்டும், யார் கைப்பட்ட உணவு தீட்டு என்பது வரையிலும் தெளிவான வரையறைகளை மனு ஸ்மிருதி வகுத்துக் கொடுத்துள்ளது.
மனு ஸ்மிருதி
மனு உள்ளிட்ட ஸ்மிருதிகள் வர்ணங்களின் கீழ் வருவோருக்கான தெளிவான சட்ட விதிமுறைகளை வகுத்துக் கொடுத்துள்ளன.
”இருபிறப்பாளர் சாதிப் பெண்ணோடு உடலுறவு கொண்ட ஒரு சூத்திரனின் ஆண்குறியை சிதைத்து விட வேண்டும், அவனது பொருட்கள் மற்றும் நிலத்தைக் கைப்பற்றிவிட வேண்டும் (VIII 374)” என்கிறது மனுஸ்மிருதி. இன்றைய தைலாபுரத் தோட்டத்து மாம்பழங்களின் விதைகள் எங்கேயிருந்து வந்தவை என்பது புரிகிறதா?
”புனிதமான திருமண பந்தத்திற்கு சொந்த சாதிப் பெண்ணே ஒரு பிராமணனுக்கு பரிந்துரைக்கப்படுகிறாள். ஆசைக்காக இதர மூன்று சாதிகளிலிருந்து மனைவியைக் கொள்ளலாம். அவளின் மதிப்பு மரியாதை என்பது சாதியைப் பொறுத்திருக்கும் (III 12)” – ஜெயேந்திர விஜயேந்திர தேவநாத மைனர் பொறுக்கித் தனங்கள் அந்தரத்தில் தொங்கும் மாங்காய்கள் அல்ல, பிரம்மாவின் மகனான மனுவே தெளிவாக ரூட்டுப் போட்டுக் கொடுக்கிறார்.
என்னதான் சூத்திரச்சி அழகாக இருந்தாலும், ஆசைப்பட்டு வைப்பாட்டியாக வைத்துக் கொள்ளலாமே தவிர அதிகாரபூர்வ தகுதியைக் கொடுக்க நினைத்தால்? அதற்கும் மனுவின் சட்டம் உள்ளது.
”கஷ்டமான காலத்தில் கூட ஒரு பிராமணனோ அல்லது ஒரு ஷத்ரியனோ (சட்டப்பூர்வமாக) ஒரு சூத்திர மனைவியை மணந்ததாக வரலாறு இல்லை. ஆசை என்னும் போதை வசப்பட்டு ஒரு தாழ்ந்த சாதிப் பெண்ணை மணக்கும் ஓர் இருபிறப்பாளன் தன்னையும், தனது ஒன்பது தலைமுறை பரம்பரையையும் சூத்திரர்களாக தரம் தாழ்த்திக் கொள்கிறான்(III 14-15)”
சம்புகன் வதம்
சூத்திரனான சம்பூகன் தவமியற்றியதைக் கண்ட ராமன் அவனது தலையை துண்டித்து தர்மத்தை நிலைநாட்டினானாம்
விஷ்ணு புராணம் சாதிப் படிநிலையை மட்டுமின்றி, தீட்டு போன்ற தீண்டாமையின் நுணுக்கமான அம்சங்களை வரையறுத்துள்ளது. “இரு பிறப்பாளனின் சவத்தைச் சுமக்க ஒரு சூத்திரனை அனுமதிக்க கூடாது. அதுபோல, ஒரு சூத்திரனின் சவத்தை ஓர் இருபிறப்பாளன் சுமக்கக் கூடாது. தந்தை அல்லது தாயின் சவத்தைப் பிள்ளைகள் சுமக்க வேண்டும். இறந்தவர் தங்களது தந்தையே என்றாலும் அந்த இரு பிறப்பாளனின் சவத்தை சூத்திரர்கள் சுமக்கக் கூடாது(XIX 1-4)” என்கிறது விஷ்ணு புராணம்.
வேதங்களும், ஸ்மிருதிகளும் காட்டிய வழியில் பீடு நடை போட்ட ராமனின் ராஜ்ஜியத்தை மீண்டும் கொண்டு வர நினைக்கிறார்கள் இந்துத்துவ பாசிஸ்டுகள். ராமனை தேசிய நாயகனாக ஏற்காதவர்களை விபச்சார விடுதியில் பிறந்தவர்கள் என்கிறார் ஒரு மத்திய அமைச்சர். இவர்கள் ராமனைப் போற்ற வேண்டிய தேவை ஏன் வந்தது? அதற்கு பல்வேறு இந்துத்துவ அரசியல் உள்நோக்கங்கள் இருந்தாலும், ராமன் இவர்களின் அன்றைய வடிவமாகவே இருந்திருக்கிறான்.
கிருதயுகத்தில் (சத்யுகம்) பிராமணர்களுக்கும், திரேதா யுகத்தில் பிராமணர்கள் மற்றும் ஷத்ரியர்களுக்கும், திரேதா யுகத்தில் பிராமண, ஷத்ரிய, வைசிய குலத்தவர்களுக்கும் தவம் செய்யும் உரிமை உள்ளது என்கிறது ராமாயணம். கலியுகத்தில் சூத்திரர்களும் தவம் செய்யலாமாம். சத்யுகத்தில் ஒழுங்காக இருந்த தர்மம், பின்னர் ஒவ்வொரு யுகமாக பிற வருணத்தவர் தவத்தில் ஈடுபட ஈடுபட குறைந்து கடைசியாக கலியுகத்தில் சூத்திரன் தவம் செய்யத் துவங்கியதும் முற்றிலுமாக குலைந்து போகும் என்கிறது ராமாயணம். இதை ராமனிடம் சொல்பவர் நாரதர்.
இந்த விளக்கங்களின் அடிப்படையில், தனது ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் சூத்திரனான சம்பூகன் தவமியற்றியதைக் கண்ட ராமன் அவனது தலையை துண்டித்து தர்மத்தை நிலைநாட்டினானாம். இது தான் ராம ராஜ்ஜியத்தின் சிறப்பு. இந்த ராஜ்ஜியத்தைக் கொண்டு வர வேண்டும் என்பது தான் மோடி உள்ளிட்ட இந்துத்துவ பாசிஸ்டுகளின் உள்ளக் கிடக்கை.
தாங்கள் பேசும் மகத்தான பொற்காலம் குறித்து யோக்கியத்தோடு சொல்லிக் கொள்ள எதுவும் இல்லை என்ற நிலையில் வரலாற்றை தாங்கள் நினைத்தவாறெல்லாம் திருத்தி எழுதி வருகிறார்கள் இந்துத்துவ பாசிஸ்டுகள்.
அவர்கள் அப்படியே செய்யட்டும். ஆனால், நமக்குச் சில விளக்கங்கள் தேவைப்படுகிறது.
முசுலீம்கள் வந்த பின்பு தான் தீண்டாமை, சாதிப் பிளவுகள், பழங்குடியினம் உண்டானது என்பதே ஆர்.எஸ்.எஸ் டவுசர்கள் இனிமேல் பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கப் போகும் வரலாறென்றால், மனு ஸ்ம்ருதி பகவத் கீதை, புருஷ ஸூக்தம், ரிக் வேதம் போன்ற பார்ப்பனிய ஹிந்து தண்டனைத் தொகுப்புகளை எழுதிய மாமுனிகள் முசுலீம்களுக்கு பிறந்தவர்கள் என்பதை அறிவிக்கவேண்டும்.
ஒருக்கால் தலித்துக்களை வேட்டையாடும் ஆதிக்க சாதி இந்துக்கள் மறுபுறம் முசுலீம்களையும் பகைவர்களாக கருதுவதற்கும் அந்த அடிப்படையில் அந்த சாதிக் கட்சிகளை அணிதிரட்டுவதற்கும் இந்துமதவெறியர்களுக்கு இந்த புதிய ‘வரலாற்றுக் கண்டுபிடிப்பு’ உதவி செய்யும். ராமதாஸ் போன்றோர் ஏற்கனவே அப்படித்தான் இருக்கிறார்கள்.
மாப்பிளா கலகம்
1921-ம் ஆண்டு மாப்பிளா போராட்டத்தை வெள்ளை இராணுவம் ஒடுக்கியது, வெள்ளையனின் காலை நக்கி அதை வரவேற்றனர் நம்பூதிரிப் பார்ப்பன துரோகிகள்.
சூத்திரன் தவம் செய்தானென்பதற்காக சம்பூகனின் தலையைத் துண்டித்த ராமனின் தந்தை தசரதன் 64 ஆயிரம் பெண்டாட்டிகளைக் கட்டியும் பிள்ளையில்லாமல் அசுவமேத யாகம் செய்தான். யாகம் செய்து குழந்தை எப்படிப் பிறந்தது? வால்மீகி ராமாயணத்தில் இருந்து ஆதாரங்களை எடுத்துக் கொடுக்கிறார் பண்டிதர் நாதத்தையர்
”தசரதனின் மூத்த மனைவியாகிய கோசலை மூன்று வெட்டில் அக்குதிரையை (அதாவது அசுவமேத யாகத்தில் பயன்படுத்தப்பட்டது) மிக உற்சாகத்தோடு கொன்றாள். அவள் கலங்கா நெஞ்சோடு ஒரு நாளிரவை அக்குதிரையோடு கழித்தாள். ஹோதா, அத்வர்யு முதலிய இருத்துவிக்குகள் இராச பாரியைகளைப் புணர்ந்தார்கள். இதன் காரணமாக தசரதனின் ராஜபத்தினிகள் கர்ப்பம் தரித்தார்கள்”
ஆர்.எஸ்.எஸ் சொல்லித் தரும் புதிய வரலாற்றை புரிந்து கொள்ள நமக்குத் தேவைப்படும் விளக்கங்கள் எல்லாம், அந்த புரோகிதர்கள் மாறுவேடம் பூண்டு வந்த முல்லாக்களா என்பதே ஆகும்.
வேதகாலத்தில் மட்டுமல்ல, கேரளத்தில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை நம்பூதிரிப் பார்ப்பனர்களை விட்டு எந்தெந்த சாதியினர் எத்தனை அடி விலகி நிற்க வேண்டும் என்பதில் இருந்து சண்டாள சாதியினர் எச்சில் துப்ப கழுத்தில் மண் சட்டியைக் கட்டிக் கொண்டே திரிய வேண்டும் என்பது வரை தீண்டாமையை தெளிவாக வரையறுத்து வைத்திருந்தனர். விவேகானந்தரே அந்த முடை நாற்றம் பொறுக்காமல் கேரளத்தை பைத்தியக்காரர்கள் விடுதி என்றார்.
நம்பூதிரி பார்ப்பனர்கள் கீழ்ச்சாதியினரின் மேல் அமுக்குப் பேய்களைப் போல் அழுந்திக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில் தான் மாப்ளா முசுலீம்கள் தாழ்த்தப்பட்ட ஈழவர்களின் தோளோடு தோள் நின்று நிலவுரிமைக்காக போர்க்குரல் எழுப்பினர். கேரளத்தின் வரலாற்றில் தாழ்த்தப்பட்ட மக்கள் முதன் முறையாக சுதந்திரக் காற்றை அந்தப் போராட்டத்தினூடாகவே சுவாசித்தனர். 1921-ம் ஆண்டு மாப்பிளா போராட்டத்தை வெள்ளை இராணுவம் ஒடுக்கியது, வெள்ளையனின் காலை நக்கி அதை வரவேற்றனர் நம்பூதிரிப் பார்ப்பன துரோகிகள்.
விஜய் சோன்கர் ஷாஸ்த்ரி
வரலாறே கூட திருத்தி எழுதப்படுகிறது. ஏன்? (விஜய் சோன்கர் ஷாஸ்த்ரி)
இன்று நமக்கு நன்றாகத் தெரியும் வரலாறே கூட திருத்தி எழுதப்படுகிறது. ஏன்?
தலித்துகளையும் ஆதிவாசிப் பழங்குடிகளையும் காலாட்படையாக கொண்டே 2002-ம் ஆண்டு குஜராத்தின் ரத்த வெறியாட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தனர் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள். அவர்களுக்கு தலித்துகள் தேவைப்படுகிறார்கள்.
ஒருகாலத்தில் அவர்ணர்களாக சமுதாயத்திற்கு வெளியே நிற்கவைக்கப்பட்ட தலித்துகளையும் பழங்குடியினரையும் இன்றைக்கு “நீங்களும் இந்துக்கள் தான்” என்று அழைப்பதே அப்பாவி இசுலாமியர்களுக்கு எதிராக கொலைவாளை ஏந்தும் கூலிகளாக அவர்களை அமர்த்திக் கொள்வதற்காகத் தான்.
குஜராத்தில் ஓடிய ரத்த வெள்ளம் இந்தியாவை மூழ்கடித்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்களின் கடமை. சுடலை மாடனுக்கு சுருட்டும் சாராயமும் படைத்து கோழியை அறுத்துக் கொண்டாடும் எதார்த்தமான ஹிந்து மக்களின் எளிமையான மத நம்பிக்கைகள் வேறு, ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத கும்பல் புகுத்த நினைக்கும் வர்ணாசிரம அடிப்படையிலான பார்ப்பனிய மதவெறி வேறு என்பதை நாம் வேறுபடுத்திப் புரிந்து கொள்ள வேண்டும்.
குறிப்புகள்:
1.  இருபிறப்பாளர் : பார்ப்பனர்கள். பூணூல் போடும் சடங்கிற்கு பிறகு பார்ப்பனர்கள் மீண்டும் ஒரு பிறவி எடுத்தவர்கள் என்று சாத்திரங்கள் சொல்கின்றன.
2. ராமன் பிறப்பு மற்றும் அசுவமேத அசிங்களை அறிந்து கொள்ள : இந்து மதம் எங்கே போகிறது?
3. பார்ப்பனிய சனாதன தருமம் தீண்டாமை மற்றும் சாதிக் கொடுங்கோன்மையை எப்படியெல்லாம் காலங்காலமாக வளர்த்தெடுத்து வந்தது என்பதைப் பற்றிய அடிப்படைப் புரிதலுக்கு இரண்டு நூல்களைப் பரிந்துரைக்கிறோம்.
அ) அசல் மனுதரும சாஸ்திரம் (1919 பதிப்பில் உள்ளபடி) – தி.க வெளியீடு
ஆ) காலம் தோறும் பிராமணீயம் – அருணன்.
- தமிழரசன்வினவு.com

கருத்துகள் இல்லை: