செவ்வாய், 30 டிசம்பர், 2014

Air Asia கடலில் விழுந்த ஏர் ஏசியா விமானம்!

கடலில் விழுந்த ஏர் ஏசியா விமானத்தில் இருந்த 40 உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக இந்தோனேசிய கடற்படை தெரிவித்துள்ளது. கடந்த 28ஆம் தேதி காணாமல் போன இந்த விமானத்தின் பாகங்கள், ஜாவா கடற்பகுதியில் கண்டெடுக்கப்பட்டன என்றும் தெரிவித்துள்ளது.ஏர்பஸ் ஏ320 ரகத்தைச் சேர்ந்த கியூஇசட் 8501 என்ற எண் கொண்ட ஏர் ஏசியா விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை 5.31 மணிக்கு இந்தோனேசியாவின் சுரபயா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. சிங்கப்பூரைச் சேர்ந்த அந்த விமானத்தை முதன்மை விமானி இரியாண்டோ இயக்கினார். அவருடன் இணை விமானி ரெமி இம்மானுவேல் ப்லீசெல் இருந்தார்.இந்தோனேசியாவைச் சேர்ந்த 144 பேரும், சிங்கப்பூர், மலேசியா, பிரான்ஸ், தென்கொரியா, இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என காணாமல் போன ஏர் ஏசியா விமானத்தில் மொத்தம் 162 பேர் பயணம் செய்தனர்.ஞாயிற்றுக்கிழமை காலை 5.31 மணிக்கு புறப்பட்ட விமானத்தை இயக்கிய விமானி, ஜகர்டா வானூர்தி பகுதியில் உள்ள போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தை காலை 6.13 மணிக்கு கடைசியாக தொடர்பு கொண்டு, மேகம் சூழ்திருப்பதால் 34 ஆயிரம் அடி உயர்த்திற்கு மேல், மாற்றுப் பாதையில் திசை மாறி செல்வதாக தெரிவித்துள்ளார். காலை 6.16 மணி வரை விமான போக்குவரத்தை கண்காணிக்கும் ரேடார் கருவியுடன் தொடர்பில் இருந்த அந்த விமானம், ஞாயிற்றுக்கிழமை 6.17 மணிக்கு ரேடார் தொடர்பை இழந்தத  nakkheeran.in

கருத்துகள் இல்லை: