வெள்ளி, 2 ஜனவரி, 2015

யுவன் சங்கர் என்கின்ற அப்துல் 3 rd திருமணம் ! என்னாப்பா ஒரே ஆம்பளைங்க போடோவையே காம்பிக்கிறீங்க ? அப்புறம் திருமணம்கிறீங்க?

இசை அமைப்பாளர் யுவன்சங்கர்ராஜாவின் திருமணம் ரகசியமாக நடந்தது. இந்த திருமணத்தில், இளையராஜா உள்ளிட்ட குடும்பத்தினர் யாரும் கலந்துகொள்ளவில்லை. இளையராஜா திருவண்ணாமலையில் உள்ளார் .கடந்த 2005-ம் ஆண்டு சுஜன்யா என்ற தோழியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 2007-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.இதன்பின்னர் ஷில்பா என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் 2011-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி திருப்பதியில் அவரை திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.இந்தநிலையில் யுவன்சங்கர்ராஜா இஸ்லாம் மதத்துக்கு மாறி தனது பெயரை அப்துல்ஹாலிக் என்று மாற்றிக்கொண்டார்.இஸ்லாம் மதத்துக்கு மாறியஅவருக்கும், ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையை சொந்த ஊராக கொண்டு மலேசியாவில் வசித்துவரும் ஆடை வடிவமைப்பாளர் ஜபருன்னிசாவுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த அக்டோபர் 29-ந்தேதி சென்னையில் நடந்ததாக கூறப்படுகிறது. தந்தை பெரியார் திரைப்படத்துக்கு இசையமைக்க மறுத்த  நன்றி மறந்த இளையராஜாவுக்கு காலம் கொடுத்த செருப்படி இது . சுயமரியாதை இயக்கத்தின் எழுச்சியால் வாழ்வில் உயர்வு பெற்ற தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்த இளையராஜா இனி முகத்தை எங்கே?
இந்த நிலையில் துபாயில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்ததாக கூறப்பட்ட திருமணம் திடீரென்று மாற்றப்பட்டு கீழக்கரையில் நடத்த முடிவு செய்யப்பட்டு, டந்த ஒருவாரத்துக்கு முன்பே கீழக்கரைக்கு வந்து தங்கியிருந்தனர்.யுவன்சங்கர்ராஜாவுக்கும், ஜபருன்னிசாவுக்கும் 01.01.2015 வியாழக்கிழமை மாலை கீழக்கரை அருகே உள்ள செங்கல்நீரோடை கிராமத்தில் அமீர்பைசல்கார்டன் பகுதியில் ரகசியமாக திருமணம் நடந்தது.இந்த திருமணத்தில் மணமகளின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். இளையராஜா உள்ளிட்ட குடும்பத்தினர் யாரும் கலந்துகொள்ளவில்லை.nakkheeran.com 

கருத்துகள் இல்லை: