சனி, 23 ஆகஸ்ட், 2014

அழகிரியை திமுகவில் சேர்க்க துர்கா ஸ்டாலின் கடும் எதிர்ப்பு! துர்க்காம்மாதாய்ன் இப்ப எல்லாமே ?

சென்னை: மு.க. அழகிரியை திமுகவில் மீண்டும் சேர்ப்பது என்ற முடிவில் அக்கட்சித் தலைவர் கருணாநிதி இருக்கிறார். ஆனால் மு.க.ஸ்டாலின் மனைவி துர்காவோ இதனை மிகக் கடுமையாக எதிர்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லோக்சபா தேர்தலை முன்வைத்து திமுகவில் தன்னை தலைவர் நிலைக்கு உயர்த்திக் கொள்ள மு.க.ஸ்டாலின் பகீரத முயற்சிகளை மேற்கொண்டார். தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க படுதீவிரமாக முயன்றார். ஆனால் ஸ்டாலினின் இந்த வியூகத்துக்கு மு.க. அழகிரி வேட்டு வைக்கும் வகையில் பேட்டி கொடுத்தார். இதனைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் திமுகவை விட்டே டிஸ்மிஸ் செய்யப்பட்டார். ஆனாலும் திமுக லோக்சபா தேர்தலில் படுதோல்வி அடைந்தது.
அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்கும் நடவடிக்கையை கருணாநிதி மகள் செல்வி மேற்கொண்டார். இதற்கு கனிமொழி முழு ஆதரவாக இருந்தார்.
ஆனால் மு.க. அழகிரி தொடர்பான செல்வியின் தொடக்க நடவடிக்கைக்கே மிக மிக கடுமையாக எதிர்ப்பை வெளிப்படுத்தியவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்காதான். உங்களுக்கு ஸ்டாலின் வேண்டுமா? அழகிரி வேண்டுமா? என்று
இந்த நிலையில் செல்வி மற்றும் கனிமொழியில் தொடர் முயற்சிகளால் மு.க. அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்கலாம் என்ற முடிவுக்கு கருணாநிதி வந்துள்ளாராம்.  திராவிட முன்னேற்ற கழகம் துர்கா முன்னேற்ற கழகமாகி பல வருஷங்களாச்சு. அதனால்தான் தொடர் தோல்விகள் என்ற உண்மையை கூட புரிந்து கொள்ளமுடியாமல் பலரும் இருப்பது வேடிக்கை அல்லது வேதனை . என்ன செய்வது இந்த மாபெரும் சுயமரியாதை சமுக நீதி அமைப்பு கடைசியில் துர்க்கா என்ற பெண்ணின் பர்சுக்குள் போய்விட்டது !
அதே நேரத்தில் மீண்டும் அழகிரி கலகக் குரல் எழுப்பினால் அது செல்வி மற்றும் கனிமொழியின் பொறுப்புதான் என்று கருணாநிதி கூறியிருப்பதாகவும் தெரிகிறது.
ஆனால் கருணாநிதி முடிவெடுத்த பின்னரும் அப்படியெல்லாம் அழகிரியை சேர்க்கவே கூடாது.. என்று மிக உக்கிரமான கோபத்தில் சொல்லி இருக்கிறாராம் துர்கா ஸ்டாலின். இப்போது மனைவி சொல்வதை கேட்பதா? அப்பா சொல்வதை கேட்பதா? என்ற குழப்பத்தில் இருக்கிறாராம் 'அடுத்த திமுக தலைவர்' மு.க.ஸ்டாலின்!
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: