வெள்ளி, 20 ஜூன், 2014

ரயில் பயணிகள் கட்டணம் 14.2%, சரக்கு ரயில் கட்டணம் 6.5% உயர்வு

டெல்லி: பயணிகள் ரயில் கட்டணம் 14.2% அதிகரித்துள்ளது.  பயணிகள் கட்டணம் மட்டும் இன்றி சரக்கு ரயில் கட்டணமும் 6.5 சதவீதம் அதிகரித்துள்ளது. பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது . இரண்டாம் வகுப்பு கட்டணம் உட்பட அனைத்து வகுப்பு ரயில் கட்டணமும் உயர்ந்துள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்ய 20 நாட்களே உள்ள நிலையில் ரயில் கட்டணங்கள் உயர்ந்துள்ளது.கூடுதல் கட்டணம் அமல் எப்படி?>முன்பதிவு செய்தோர் கூடுதல் கட்டணத்தை பயணத்தின் போது செலுத்த வேண்டும்.ரயிலில் டிக்கெட் பரிசோதகரிடம் கூடுதல் கட்டணம் செலுத்தி ரசீது பெற வேண்டும்.

கருத்துகள் இல்லை: