சனி, 21 ஜூன், 2014

டைரக்டர் களஞ்சியம் நடிகை பிரியங்காவின் கன்னத்தில் அறைந்தான் ! ஆஸ்பத்திரியில் நடிகை !

நடிகை பிரியங்காவை டைரக்டர் களஞ்சியம் காயம் படும்படி கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரியங்கா ஏற்கனவே கங்காரு படத்தில் நடித்துள்ளார். தற்போது கோடை மழை என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் பிரியங்காவின் அண்ணன் கேரக்டரில் களஞ்சியம்
நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு சங்கரன் கோவில் பகுதியில் நடந்து வருகிறது. பிரியங்காவுக்கும் களஞ்சியத்துக்கும் வாக்கு வாதம் நடப்பது போன்றும் அப்போது கோபமாகி பிரியங்கா கன்னத்தில் களஞ்சியம் அறைவது போன்றும் ஒரு காட்சியை எடுத்தனர். இதில் களஞ்சியம் நிஜமாகவே கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டாராம். இதனால் பிரியங்கா நிலை குலைந்து போனார். வலி தாங்காமல் மயங்கி விழுந்தார். காது கிழிந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.இந்த டயருடக்கரின் டார்ச்சர் தாங்க முடியாமல் அங்காடி தெரு அஞ்சலி தமிழ்நாட்டை விட்டே ஓடினார்
படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு உள்ளது. ரிகர்சல் காட்சியிலும் களஞ்சியம் வலிக்கும் அளவுக்கு ஓங்கியே அடித்தாராம். சம்பவம் குறித்து பிரியங்கா தந்தை குணசேகரனிடம் கேட்ட போது ஆவேசப்பட்டார். அவர் கூறியதாவது:–

களஞ்சியம் அடித்ததில் என் மகள் பிரியங்காவுக்கு கன்னத்தில் வலி ஏற்பட்டு உள்ளது. இதை அவரிடம் சொல்லி உள்ளார். திரும்பவும் அது போலவே ஓங்கி அடித்து இருக்கிறார். இதனால் மயங்கி விழுந்து விட்டாள். ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். காதில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். சில நாட்கள் ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். மருத்துவ அறிக்கையில் மோசமான காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. களஞ்சியத்துக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கும்படி டாக்டர்கள் கூறினர். அந்த அளவுக்கு அவர் தாக்கப்பட்டு உள்ளார். இது எங்களுக்கு மிகுந்த வேதனையை அளித்துள்ளது. புகார் அளிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். maalaimalar.com

கருத்துகள் இல்லை: