திங்கள், 25 நவம்பர், 2013

மலையாள படத்துக்காக பாடகியானார் நஸ்ரியா!

மலையாள சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் ஹீரோயினாக அவதாரமெடுத்தவர் நஸ்ரியா நசீம். இவர் தமிழில் ‘நேரம்’, ‘ராஜாராணி’, ‘நய்யாண்டி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழில், இவர் நடித்த ‘திருமணம் எனும் நிக்காஹ்’ படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது. மேலும் பல படங்களும் இவர் கைவசம் உள்ளது. மலையாளத்திலும் சில படங்களில் நடித்து வருகிறார். தற்போது மலையாளத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து ‘சலால மொபைல்ஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சரத் ஏ.ஹரிதாஸன் என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தில் நஸ்ரியா பாடல் ஒன்றை பாடியுள்ளாராம். கோபி சுந்தர் இசையமைத்த அந்த பாடல் நன்றாக வந்திருப்பதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். நஸ்ரியா தொலைக்காட்சிகளில் ஏற்கெனவே பாடி, சிறந்த பாடகியாக நிரூபித்திருந்தாலும், திரைப்படத்துக்காக இவர் பாடுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: