திங்கள், 25 நவம்பர், 2013

வெளி மாநில தொழிலார்கள் பிச்சை எடுக்கும் நிலை ! பேசியது 450 கொடுப்பது 150 ! கமிஷன் கூத்து

சென்னையில் முகாமிட்டுள்ள ஆந்திரா, பீகார், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநில தொழிலாளர்களின் குடும்பங்கள், சாலைகள், சிக்னல்களில் பிச்சை எடுக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 3 லட்சம் பேர்:
சென்னையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள், சிறப்பு பொருளாதார மண்டல பணிகள், புதிய கட்டுமான பணிகள் அதிகளவில் நடக்கின்றன.மேலும் பல்வேறு தொழிற்பேட்டைகளில் அதிகளவில் வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. அதனால், தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநில இளைஞர்களும் சென்னையில் குவிந்து வருகின்றனர்.சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி சென்னையில் மட்டும், 3 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.அவர்களில் ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள், தங்கள் மனைவி குழந்தைகளோடு இங்கு வந்து தங்கி பணியாற்றி வருகின்றனர். கமிஷன் எவ்வளவு?;அவர்களுக்கு மெட்ரோ ரயில் திட்ட பணியிடங்களில் சிறிய அளவிலான, கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.அவற்றில் தங்கியுள்ள தொழிலாளர்களின் குடும்பத்தார், அங்கேயே சமையல் செய்து சாப்பிடுகின்றனர்.அங்கும் அவர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கப்படுவதால், அவர்கள் பேருந்து, ரயில் நிலையங்கள், சாலை சந்திப்புகள், சிக்னல்களில் பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவர்கள் கடின உழைப்பாளிகள் .. கம்பனிகளில் தமிழர்கள் எல்லாம் சோம்பேறிகளாகி விட்டனர் .. தமிழர்கள் யாரும் உடல் உழைப்புக்கு தயாராக இல்லை ...பெரும்பாலான physical work அந்நிய மாநிலதாரால் தான் செய்ய படுகிறது ...தமிழகத்தில் படிப்பு என்ற பெயரில் நிறைய சோம்பேறிகளையும் , கருத்து கந்த சாமிகளையும் உருவாக்கி விட்டோம்...
வெளிமாநில தொழிலாளர்களை பொறுத்தவரை, மனிதவள ஏஜென்சிகள் மூலமாகவே பலர் வேலைக்கு சேர்ந்துள்ளனர்.அவர்களை வேலைக்கு சேர்த்த ஏஜென்சிகள், ஒவ்வொருவருக்கும் தினமும் 450 ரூபாய் வரை சம்பளம் என்று கூறி அழைத்து வந்து, கட்டுமான நிறுவனங்களில் சேர்த்து விட்டு, தங்களுக்குரிய கமிஷனை பெற்றுக் கொண்டு சென்று விட்டனர்.ஆனால், பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கோ, தினமும் 150 ரூபாய் மட்டும் தான் சம்பளம் வழங்கப்படுகிறது.அதிலும் தொடர்ந்து பணி வழங்கப்படுவதில்லை. இதனால் குழந்தைகளை வைத்துக் கொண்டு சிரமப்படும் நிலைக்கு அந்த தொழிலாளர்கள் தள்ளப்படுகின்றனர்.தற்போது சென்னையின் சாலைகளில் பிச்சையெடுக்கும் வெளிமாநிலத்தவரில், பெரும்பாலோர் ஒடிசாவை சேர்ந்தவர்கள்.அவர்களுக்கு மொழி தெரியாததாலும், நம்பகத்தன்மை இல்லாததாலும் அவர்களை வேறு பணிகளில் யாரும் சேர்ப்பதில்லை. இதனால் அவர்களும் வேறு வழியில்லாமல் பிச்சை எடுத்து வருகின்றனர்.


கணக்கெடுப்பு தேவை:

கட்டுமான நிறுவனங்களி்ல் தமிழக தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை விட, வெளிமாநில தொழிலாளர்களுக்கு குறைத்து வழங்கப்படுவதால், அவர்களுக்குள் தேவையற்ற பிரச்னைகளும் ஏற்படுகின்றன.வெளிமாநில தொழிலாளர்களை கணக்கெடுத்து அவர்களை வரன்முறைப்படுத்த வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்தபோதும் அவர்கள் நிலை மாறவில்லை.

57 பேர் பலி:

மெட்ரோ ரயில், கட்டுமான பணிகள், கட்டடம் சுத்தம் செய்யும் பணி, மேம்பால கட்டுமான பணி போன்ற பணிகளில் ஈடுபட்டு, பாதுகாப்பு கருவிகள் இல்லாமல் பணியாற்றியதால், இதுவரை மொத்தம் 57 வெளிமாநில தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர்.dinamalar.com

கருத்துகள் இல்லை: