சனி, 10 ஆகஸ்ட், 2013

விஜய் ரசிகர் தற்கொலை! தனது விளம்பரத்திற்காக ஆட்டு மந்தைகளை போஷிக்கும் சினிமாகாரன்

கோவை மாவட்டம் துடியலூர் பகுதியைச் சேர்ந்த நடிகர் விஜய்யின் ரசிகர்
ஒருவர் தலைவா படம் பார்க்க முடியாத வேதனையில் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட விக்ரம் என்கிற விஷ்ணு குமார் கட்டிட வேலை செய்து வந்தார். இவருக்கு வயது 20.இவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகாராம்! எந்த ஒரு விஜய்யின் படத்தையும் முதல் நாளே பார்த்து விடுவதுதான் இவரது வழக்கம் என்று கூறுகின்றனர்.கோவை சென்ட்ரல் தியேட்டருக்கு படம் பார்க்க வந்தார் விஷ்ணு குமார் ஆனால் படம் ரிலீஸ் ஆகவில்லை. அங்கிருந்து பாலக்காட்டிற்கு தலைவா படம் பார்க்கச் சென்றுள்ளார்.ஆனால் கூட்டம் அதிகமாக இருந்ததால் இவருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை.மீண்டும் கோவை வந்து தியேட்டருக்குச் சென்று தலைவா ரிலீஸ் ஆகியுள்ளதா என்று பார்த்த்துள்ளார்  இந்த முட்டாள் தனத்தை வளர்க்கும் கதாநாயகர்கள் எல்லாருமே பக்கா கிரிமினல்கள்

கருத்துகள் இல்லை: