செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

ஓராண்டில் 11 லட்சம் கருக்கலைப்புகள் ! இதைவிட வெள்ளைக்காரன் கலாசாரமே மேல்?

கருக்கலைப்பு மற்றும் பிரசவகால மரணங்கள் தொடர்பாக
மாநிலங்களவையில் இன்று எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி குலாம் நபி ஆசாத் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் வருமாறு:- நாட்டில் 2008-09 ஆண்டில் 11.06 லட்சம் கருக்கலைப்புகள் செய்யப்பட்டுள்ளன. இந்திய பதிவுத்துறை தலைவர் தகவலின்படி, பிரசவகால மரணத்தில் 8 சதவீத மரணத்திற்கு கருக்கலைப்பு காரணமாக இருந்துள்ளது. 2008-ல் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு காரணமாக தெற்கு மத்திய ஆசிய பிராந்தியத்தில் 13 சதவீத தாய்மார்கள் இறந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. ஒரு லட்சம் பாதுகாப்பற்ற கருக்கக்கலைப்பில் 200 மரணங்கள் ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதிக அளவில் பாதுகாப்பற்ற கருக்கலைப்புகள் நடக்கும் இடமாக இந்தியா இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்தியாவில் எத்தனை பேர் இறந்துள்ளனர் என்பது அந்த அறிக்கையில் இல்லை. போதுமான உபகரணங்கள் மற்றும் மருந்துகள் வாங்கி சுகாதார வசதிகளுடன் பாதுகாப்பான கருக்கலைப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்காக, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நிதி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு குலாம் நபி ஆசாத் கூறினார்.

கருத்துகள் இல்லை: