செவ்வாய், 3 ஜூலை, 2012

Angel TV வின்சென்ட் செல்வக்குமார் பாலியல் முறைகேடுசிறுமிகளையும் விடுவதில்லை

 Famous Christian Pastor Trouble
ராமநாதபுரம்: பெரும் பிரபலமான ஒரு கிறிஸ்தவப் போதகர் மீது அவர் சார்ந்த கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களே பரபரப்பான செக்ஸ் புகார்களை சுமத்தியுள்ளனர். இன்னொரு நித்தியானந்தா போல அவர் செயல்படுவதாகவும் அவர்கள் பரபரப்பான குற்றச்சாட்டுக்களை அடுக்குகின்றனர்.
அவரது பெயர் வின்சென்ட்செல்வக்குமார். பிரபலமான ஏஞ்சல் டிவியின் முக்கிய பங்குதாரர்களில் ஒருவர் இவர் என்றுகூறப்படுகிறது. இவருக்கு எதிராகத்தான் தற்போது கிறிஸ்தவர்கள் கொந்தளித்துள்ளனர்.

ராமநாதபுரத்தில் வசித்து வருகிறார் வின்சென்ட்செல்வக்குமார். பாதிரியாராகவும் இவர் இருக்கிறார். இவர் ஜெப ஆலயம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். அதில் நூற்றுக்கணக்கானோர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் தற்போது வின்செட் செல்வக்குமாருக்கு எதிராக திரும்பியுள்ளனர். அவரது சபையை விட்டு விலகி விட்ட இவர்கள் தனியாக செயல்படத் தொடங்கியுள்ளனர்.
வின்சென்ட் செல்வக்குமார் பல்வேறு பாலியல் முறைகேடுகளில் மோசமான முறையில் ஈடுபட்டிருப்பதாக அவர்கள் குமுறுகிறார்கள். வின்சென்ட்டின் மோசமான செயல்பாடுகளால் அதிர்ச்சி அடைந்து அவரது சொந்த பந்தங்களும் கூட இந்த சபையிலிருந்து விலகி விட்டதால் பரபரப்பு கூடியுள்ளது.
பைபிளை மேற்கோள் காட்டி இவர் செக்ஸ் லீலைகளில் ஈடுபடுவதாக குமுறலுடன் கூறுகிறார்கள் இவர்கள். பைபிளில் கூறியுள்ளவற்றை பெண்களிடம் கூறி அவர்களிடம் உறவு கொள்வதும், அவர்களை பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்குவதுமாக இவர் உள்ளாராம்.
பெண்கள் மீது கை போட்டு பேசுவது, முத்தமிடுவது, பெண்கள், மாணவிகளின் உடைகளை தான் அணிந்து கொள்வது, பெண்களிடம் பாலை கொடுத்து குடிக்கச் சொல்லி விட்டு பாதியில் வாங்கி தான் குடிப்பது, நைட்டி, புடவையில் இருப்பது, நைட்டி உடையை அணிந்து கொண்டு பெண்களிடம் தவறான உறவு கொள்வது என சகலவிதமான அசிங்கமான செயல்களிலும் இவர் ஈடுபட்டு வருகிறாராம்.
தனது சபையில் வேலை பார்க்கும் வேலைக்காரப் பெண்ணைக் கூட இவர் விடுவதில்லையாம். இவர் ஒருமுறை ஒரு பெண்ணுடன் அந்தரங்கமாக இருந்தபோது அதை அவரது உறவுக்காரப் பெண் ஒருவர் பார்த்து அதிர்ந்து போய் விட்டாராம்.
சிறுமிகளையும் கூட இவர் விடுவதில்லையாம். பல சிறுமிகளிடம் இவர் பாலியல் சில்மிஷங்களைச் செய்துள்ளாராம்.
வின்சென்ட் செல்வக்குமாருக்கு பிரபலமான போதகரான சென்னையைச் சேர்ந்த மோகன் லாசரஸ், சாது சுந்தர் செல்வராஜ் உள்ளிட்டோர் ஆதரவாக உள்ளதாக இவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
கிறிஸ்தவர்கள் மத்தியில் வின்சென்ட் செல்வக்குமார் மீதான புகார்கள் பெரும் அதிர்ச்சி அலைகளையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: