வெள்ளி, 30 டிசம்பர், 2011

Jeya: கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்தால்(தற்காலிகமாக) மன்னிப்பே கிடையாது

சென்னை: அதிமுக பொதுக் குழு கூட்டம் சென்னையில் இன்று கூடியது. சசிகலா நீக்கத்துக்கு பின் நடக்கும் முதல் முக்கிய கூட்டம் இது.  இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி 200 தலைமை செயற்குழு உறுப்பினர்கள், 2500 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தகவல்கள் அனுப்பப்பட்டது.
முதலில் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. அதில் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆலோசனை தற்காலிகமாக நடத்தப்பட்டது. அதன்பின் பொதுக் குழு கூட்டம் இன்று கூடியது. இந்தக் கூட்டத்தில் முல்லைப் பெரியாறு அணை, கூடங்குளம் அணு மின்நிலையம், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல், லோக்பால் மசோதா, தமிழக சட்டம்ஒழுங்கு நிலை, ஆட்சியின் புது அறிவிப்புகள், சாதனைகள், புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் என்று இதுவரை 17 பேர் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் அது குறித்தும், அவருக்கு வேண்டியவர்கள், உதவி செய்கிறவர்கள் குறித்து விவரம் கேட்டு, அவர்களை மறைமுகமாக ஜெயலலிதா எச்சரித்தாக தெரிகிறது. அப்படி கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மீது தொடர்பு வைத்திருந்தால், அவர்களுக்கு மன்னிப்பே கிடையாது தற்காலிகமாக என மறைமுக எச்சரித்துள்ளார் ஜெயலலிதா.

கருத்துகள் இல்லை: