வியாழன், 29 டிசம்பர், 2011

சவூதிக்கு மருத்துவர்கள் தேவை : இந்தியாவிடம் கோரிக்கை

www. omcmanpower.com
எண்ணெய் வளமிக்க பணக்கார நாடுகளில் ஒன்று சவூதி அரேபியா நாட்டில் இருதய நோய் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதேபோல் பெண் செவிலியர்கள் தேவையும் அங்கு அதிகரித்துள்ளது. அதன் பொருட்டு இந்தியாவில் அத்தகைய மருத்துவர்கள், செவிலியர்கள் வேண்டி அந்நாட்டு அரசு கேட்டுள்ளது.
அதன்பொருட்டு இந்திய அரசு, சவூதியில் இருதய சிறப்பு மருத்துவமனையில் பணியாற்ற 3 ஆண்டு பணியனுபவம் பெற்ற 55 வயதுக்குட்பட்ட மருத்துவர்கள், கன்சல்ட்டுகள், பி.எஸ்.சி நர்சிங் படித்த 2 ஆண்டுகள் அனுபவம் உள்ள செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்களுக்கு சென்னை, மும்பை, காஷ்மீர், ஐதராபாத் போன்ற மாநகரங்களில் நேர்காணல் நடத்தப்படும்.


அந்நாட்டு சுகாதார அமைச்சகம் இப்பணியை வழங்கவுள்ளதால் அதிகப்படியான சம்பளம், சலுகைகள் கிடைக்கும், வெளிநாட்டு வாழ்பவர்களுக்கான பாதுகாப்பும் கிடைக்கும் என குறிப்பிட்ட அரசு குறிப்பு.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள், கல்வி, அனுபவம், பாஸ்போர்ட், புகைப்படத்துடன் 48, முத்துலட்சுமி சாலை, அடையார், சென்னை 20 என்ற முகவரியில் இயங்கிவரும், அரசின் வெளிநாட்டு வேலைவாய்ப்பக இயக்கத்திற்கு வரும் 4ந்தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.

அல்லது, www. omcmanpower.com என்ற இணையத்தளத்தில் பதிவும் செய்யலாம். என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: