வியாழன், 7 அக்டோபர், 2010

காஷ்மீர் பிரச்சினையில் ஐ.நா தலையிடாது :ஐ.நா செயலாளர்நாயகம் பான் கீ மூன்!

காஷ்மீர் பிரச்சினையில் நாம் தலையிடப் போவதில்லை என ஐநா செயலாளர்நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,”இந்தியாவும், பாகிஸ்தானும் அயல்நாடுகள். ஆசியப் பிராந்தியத்தில் முக்கிய நாடுகள்.

அந்நாடுகளுக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து எங்களை தலையிட அழைத்தால் மட்டுமே நாம் அதில் தலையிடுவோம்.காஷ்மீர் பிரச்சினையில் நாங்கள் தேவை இல்லாமல் தலையிடமாட்டோம். காஷ்மீரில் நடந்த கலவரம்- உயிரிழப்பு தொடர்பாக நாங்கள் கவலை அடைகிறோம்.
எனவே அமைதி ஏற்படுத்தும்படி நான் இரு நாடுகளிடமும் கேட்டுக் கொள்கின்றேன்” என்றார்.

கருத்துகள் இல்லை: