புதன், 6 அக்டோபர், 2010

வெள்ளைக்கொடி விவகார வழக்கில் ஜென்ஸ் சாட்சியம்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது திட்டமிட்டவகையில் புனையப்பட்டதாக கூறப்படும் வெள்ளைக்கொடி விவகார வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மேற்படி சர்ச்சைக்குரிய விடயத்தினை வெளியிட்ட ஊடகவியலாளரான பிரெட்றிக்கா ஜென்ஸ் நேற்று மூவர் கொண்ட சட்டத்தரணிகள் குழுமம் முன் சாட்சியமளித்துள்ளார்.

அவரது சாட்சியம் அரசதரப்பு சட்டத்தரணியினால் நெறிப்படுத்தப்பட்டது. அதன் முழுவிபரம் வருமாறு.

அரச சட்டத்தரணி : உங்களுடைய தொழில்

முதலாவது சாட்சி : ஊடகம்

அரச சட்டத்தரணி : தொழிலை எங்கு ஆரம்பித்தீர்கள்?

முதலாவது சாட்சி : சண்டே ரைம்ஸ் பத்திரிகையில் 1992 ஆம் ஆண்டு சுயாதீன நிருபராக ஊடகத்துறைக்குள் நுழைந்தேன் 1995 ஆம் ஆண்டு வரை அறிக்கையிட்டேன், நேர்காணலும் செய்தேன்.

அரச சட்டத்தரணி : சண்டே லீடருக்கு எவ்வாறு சென்றீர்கள்?

முதலாவது சாட்சி : லசந்த விக்ரமதுங்க (முன்னாள் சண்டே லீடர் பிரதம ஆசியர்) என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைத்தார். அவர் எனது நண்பரும் கூட.

அரச சட்டத்தரணி : சண்டே லீடர் பத்திரிகையில் நுழைந்த பின்னர்?

முதலாவது சாட்சி : முதல் முறையாக யாழ்ப்பாணத்திற்கு சென்றேன். அன்டன் பாலசிங்கத்தை நேர்காணல் செய்வதற்கு (புலிகளின் மதியுரைஞர்)

அரச சட்டத்தரணி : ஏன்? அவரை நேர்காணல் செய்தீர்கள்?

முதலாவது சாட்சி : லசந்தவிற்கு அது தேவையாக இருந்தது. அவருடைய நேர்காணலுடன் எனது ஊடகப்பணியும் ஆரம்பமானது.

அரச சட்டத்தரணி; எத்தனை வருடங்கள் கடமையாற்றினீர்கள்?

முதலாவது சாட்சி : இரண்டு வருடங்கள் கடமையாற்றினேன். பின்னர் முழுநேர ஊடகவியலாளராக இணைந்து கொண்டேன். பின்னர் 1996 ஆம் ஆண்டு தொலைபேசியில் தொடர்பு கொண்ட லசந்த முழு நேர பத்திரிகையாளராக இணைந்து கொள்ளுமாறு ( சண்டே லீடரில்) கேட்டுக் கொண்டார். நானும் இணைந்து கொண்டேன்.

அரச சட்டத்தரணி : லசந்த என்றால் யார்?

முதலாவது சாட்சி : சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசியர் லசந்த விக்ரமதுங்க( அமரர்) .

அரச சட்டத்தரணி : 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்த பத்திரிகையில் நீங்கள் என்ன பதவியை வகித்தீர்கள்? உங்களுடைய பொறுப்பு உங்களுக்கு முன்னர் அந்த பதவியை வகித்தவர் யார்?

முதலாவது சாட்சி : பிரதம ஆசியராக. ஒவ்வொரு வாரமும் பத்திரிகையை வெளிக்கொணரவேண்டியது எனது பொறுப்பாகும். எனக்கு முன்னர் அந்தப் பதவியை லசந்த விக்கிரமதுங்க வகித்தார்.

அரச சட்டத்தரணி: எதிரியை (சரத் பொன்சேகாவை) முதன் முதலில் எங்கு சந்தித்தீர்கள்? இராணுவ தளபதி மற்றும் பாதுகாப்பு பிரதானியாக அவர் பதவி வகித்தமை உங்களுக்குத் தெரியுமா? please click heading for full story

கருத்துகள் இல்லை: