சனி, 9 அக்டோபர், 2010

முறுகண்டி ஹொட்டல் திறப்பு விழாவில் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டால் தமிழரங்கத்தின் அடுத்த சந்திப்பில் கலந்து கொள்ளமாட்டேன்-ஆனந்தசங்கரி!

புலிகள் பாணியில் செயற்பட்டுவரும் அரசு தமிழ் மக்களின் காணிகளையும், ஆலய காணிகளையும் பலாத்காரமாக அபகரித்து வருகின்றது. முறுகண்டியில் கட்டப்பட்டுவரும் ஹாட்டல் கட்டும்பணியை தடுத்து நிறுத்த வேண்டும். இது புனிதமான முறுகண்டி ஆலய பகுதியை அசிங்கப்படுத்தும் நடவடிக்கை இது குறித்து ஜனாதிபதி உட்பட எவரவர் கவனத்திற்கு கொண்டுவர வேண்டுமோ அவர்களது கவனத்திற்கு கொண்டுவந்துள்ளேன்.

இந் நிலையிலும் இதனை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவில்லை. இவ் ஹொட்டல் திறப்பு விழா எதிர்வரும் 7ம் திகதி இடம்பெறவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவத்தார். அவ்வாறான திறப்பு விழாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டால் அவர் பங்கு கொள்ளும் “தமிழரங்கத்தின்” சந்திப்பில் நான் கலந்து கொள்ள மாட்டேன் என்பதை அவரிடமே தெரிவித்துள்ளதாகவும் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி தமிழ்மிரர் இணையத்திற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: