அதன்படி ஷெல் லங்கா நிறுவனத்தின் 51 வீத பங்குகளையும் ஷெல் டேர்மினல் லங்கா லிமிட்டட் நிறுவனத்தின் 100 வீத பங்குகளையும் அரசாங்கம் 63 மில்லியன் அமெரிக்கன் டொலருக்கு கொள்வனவு செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.ஷெல் லங்கா நிறுவனத்தின் எஞ்சிய 49 வீத பங்குகளையும் மக்கள்மயப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக ஆய்வுகளை மேற்கொள்ள பிரதமரின் செயலாளர் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது என ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
மஹிந்த சிந்தனைக்கு ஏற்ப அரசாங்கம் அரச நிறுவனங்களைத் தனியார் மயப்படுத்துவதைத் தடுத்து வருகிறது. அத்துடன் தனியார் மயப்படுத்தப்பட்ட அரச சொத்துக்களை மீளப் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கெஹெலிய மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக