வியாழன், 24 ஜூன், 2021

இலங்கை கடற்கரைகளில் 88 கடலாமைகளும் ஒரு திமிங்கிலமும் 7 டொல்பின்களும் இறந்து கரை ஒதுங்கின

Newsfirst.lk Tamil :இலங்கை கடற்கரையின் சில பகுதிகளில் இன்றும் இறந்த நிலையில் 7 கடலாமைகள் கரையொதுங்கின.
இன்று (23) காலை மொரட்டுவை – லுனாவ பகுதியில் ஒரு கடலாமை கரையொதுங்கியதுடன், பகல் வேளையில் முரவத்த பகுதியில் மற்றுமொரு கடலாமையின் உடல் கரையொதுங்கியது.
களுத்துறை வடக்கு பகுதியிலும் காலி – கொஸ்கொட, நாபே பகுதியிலும் கடலாமைகள் இறந்துள்ளன.
இதேவேளை, ஹிங்கடுவையில் இன்று இறந்த நிலையில் மீன்கள் கரையொதுங்கின.
நாரா நிறுவன அதிகாரிகள் குறித்த பகுதிக்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர்.
கல்முனை – பாண்டிருப்பு கடற்கரையில் உயிரிழந்த நிலையில் இன்று டொல்பின் கரையொதுங்கியுள்ளது.
முந்தல் – சின்னப்பாடு கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் கடலமை கரையொதுங்கியுள்ளது.
MV X-Press Pearl கப்பல் தீப்பற்றியதில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த மாதம் முதல் கடல்வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன.

இதுவரையான காலப்பகுதில் சுமார் 88 கடலாமைகளும் ஒரு திமிங்கிலமும் 7 டொல்பின்களும் இறந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் கரையொதுங்கியுள்ளன.

கருத்துகள் இல்லை: