செவ்வாய், 15 செப்டம்பர், 2020

இந்தியை காப்பாற்றுவதை விட இந்திய மக்களை காப்பாற்ற வேண்டும்,,,ர் அமித்ஷாவுக்கு மு.க.ஸ்டாலின்

  dhinakaran :சென்னை: இந்தி மொழியை காப்பாற்றுவதை விட இந்திய மக்களை கொரோனாவில் இருந்து காப்பாற்ற அமித்ஷா கவனம் செலுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது: இந்திய நாட்டின் உள்துறை அமைச்சராக இருக்கும் அமித்ஷா, இந்தி மொழி இந்நாட்டை ஒருங்கிணைப்பதாகச் சொல்லி இருக்கிறார். பன்முகத் தன்மையுடன் பரந்து விரிந்திருக்கும் இந்நாட்டை, ஒரு சில மாநில மக்கள் மட்டுமே பேசும் மொழி எப்படி ஒருங்கிணைக்க முடியும்?. வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் கெடுக்கும் ஒன்றாகத்தான் இந்தி இருக்கிறது என்பதை அமித்ஷா உணர வேண்டும். இந்தியை காப்பாற்றுவதை விட, கொரோனாவில் இருந்து இந்தியரை காப்பாற்றுவதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை: