வெள்ளி, 18 செப்டம்பர், 2020

முதல்வர் யோகம்? -துரைமுருகனை ஆசிர்வதித்த சித்தர்

minnambalam :திமுக பொதுச் செயலாளரான துரைமுருகனுக்கு திமுகவில் இருந்தும் கூட்டணிக் கட்சிகளிடம் இருந்தும் ஏன் ரஜினியிடம் இருந்தும் கூட வாழ்த்துகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் துரைமுருகன் பொதுச் செயலாளர் ஆனதும் தானே தேடிச் சென்று, வாழ்த்தும் ஆசியும் பெற்றது ஒரு சித்தரிடம்.    வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே குளிப்பதால் பார்ப்பதற்கு வடநாட்டு அகோரி போலவே இருக்கும் அந்த சித்தரைத் தேடி தன் மகன் கதிர் ஆனந்தோடு நேற்று இரவு (செப்டம்பர் 17) சென்றிருக்கிறார் துரைமுருகன். ‘அய்யா... நீங்க சொன்னதைப் போலவே என் பையனும் டெல்லிக்கு ஜெயிச்சு போயிட்டான். நானும் பொதுச் செயலாளர் ஆயிட்டேன்” என்று நிறைந்து பேச துரைமுருகனை ‘நல்லா இருப்படா’என்று சொல்லி வாழ்த்தியிருக்கிறார் சித்தர். அவர் அனைவரயும் வாடா போடா என்றுதான் பேசுவார்.   காட்பாடியிலிருந்து குடியாத்தம் செல்லும் சாலையில் 19 ஆவது கிலோட்டரில் மகாதேவ மலை என்ற சிறு மலையிருக்கிறது. அங்கே இருப்பவர்தான் ஸ்ரீலஸ்ரீ மஹாமஹா ஆனந்த சித்தர். இவருக்கு துரைமுருகன் பல ஆண்டுகளாக பழக்கம். துரைமுருகனையே வாடா போடா என்று அழைக்கும் அளவுக்கு உரிமையானவர் அந்த சித்தர். 

திமுகவினர் பலரிடமும் இந்த சித்தர் பற்றி சொல்லி அவர்களையும் சித்தரின் பக்தர்களாக்கியிருக்கிறார் துரைமுருகன். துரைமுருகனின் அறிமுகத்தால் அதிமுகவில் பலரும் கூட இந்த சித்தரை நோக்கிச் சென்று வருகிறார்கள். hghgகடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியில் கதிர் ஆனந்த் நின்றபோது துரைமுருகன் தேர்தல் செலவுக்குப் பணம் கொடுக்க மறுக்கிறார் என்று கட்சிப் பிரமுகர்களும், பல மாசெக்களும் புலம்பினார்கள்.

மாவட்டச் செயலாளர்களின் இந்தப் புலம்பலை துரைமுருகனின் குடும்பத்தினர் சிலரே வீடு தேடிச் சென்று அவரிடம் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு துரைமுருகன் சொன்ன பதில் என்ன தெரியுமா? ‘இதப் பாருங்க. மஹாமஹா ஆனந்த சித்தரே சொல்லிட்டாரு, யார் என்ன சொன்னாலும் யார் என்ன செஞ்சாலும் உம் பையந்தான் வேலூர்லேர்ந்து டெல்லிக்கு போகப் போறான்னு சொல்லிட்டாரு. சித்தரே சொல்லிட்டாரு அப்புறம் என்னய்யா?’ என்று அன்றைக்கு சொன்னார் துரைமுருகன். இதுபற்றி நாம் அப்போதே மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருக்கிறோம்.

அந்த மஹாமஹா சித்தரிடம்தான் இப்போது தான் பொதுச் செயலாளர் ஆன பின் தேடிச் சென்று ஆசி வாங்கியிருக்கிறார் துரைமுருகன்.

இதற்கிடையில் கதிர் ஆனந்தின் ஆதரவாளர்கள் தங்களது வட்டாரங்களில், “துரைமுருகன் சித்தரைப் பார்க்கப் போயிருக்காரு. அப்ப சித்தர் உனக்கும் முதல்வராகும் யோகம் இருக்கு... நல்லா இரு போய்ட்டு வா என்று சொன்னதும் துரைமுருகன், கதிர் ஆனந்த் போன்றோர் அதிர்ந்துவிட்டார்கள். இதனை கட்சிக்காரர்களிடமும் கதிர் ஆனந்த் பெருத்த மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுவருகிறார்”என்கிறார்கள்.

.-வேந்தன்

கருத்துகள் இல்லை: