ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

நீட் மையங்களுக்கு 12 ஆயிரம் கோடி லாபம்.. . மத்திய மாநில ஆட்சியாளர்களுக்கு பங்கு எவ்வளவு???

JP Prakash : தகர்ந்த நீட் மாயைகள்.. மாயை 1 : நீட் தேர்வு தகுதியை உறுதிப்படுத்துகிறது.. இந்திய அளவில் நீட் தேர்வை எழுதிய 12.69 லட்சம் பேரில் 7.14 லட்சம் பேர் கட்-ஆப் மார்க்வை விட அதிகமாக எடுத்து தகுதி பட்டியலில் இடம் பெறுகிறார்கள்.. ஆனால், இந்தியாவில் மொத்தமுள்ள மருத்துவ இடங்களோ 52,965... அதாவது, நீட் கிளியர் செய்தவர்களில் வெறும் 7.4% சதவீத பேர்களுக்கு மட்டும் தான் மருத்துவம் படிக்க இடம் கிடைக்கும்.. 2018 இல் பொது பிரிவினர் கட்ஆப் 720 க்கு 119 (16.5%) ; இடஒதுக்கீடு பிரிவினருக்கு 720 க்கு 96.. அதாவது நீட் தேர்வில் 16.5% & 13.3% சத மதிப்பெண்களை எடுத்தாலே தகுதி பட்டியலில் இடம் கிடைத்துவிடும்.. ஆனால், மாநில +2 பொது தேர்விலோ 50% சத மதிப்பெண்களை எடுத்தால்தான் தகுதி. மாயை 2 : நீட்டால் தனியார் கல்லூரிகளில் டொனேஷனுக்கு வேட்டு..

நீட் கிளியர் செய்த 7.14 லட்சம் பேரில், அரசு கல்லூரிகள் & தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு கோட்டாவில் மெரிட் மதிப்பெண்கள் அடிப்படையில் முதல் 50 ஆயிரம் பேருக்கு இடம் கிடைக்கும்.. மீதமுள்ள 6.5 லட்சம் பேரிலிருந்து, மொத்தமுள்ள பத்தாயிரத்து சொச்சம் மேனஜ்மென்ட் கோட்டா இடங்களை வழக்கம்போல பணம் வாங்கிகொண்டு, டொனேஷன் வாங்கிக்கொண்டு தனியார் கல்லூரிகள் நிரப்பிகொள்ளலாம்.. எந்த தடையும் இல்லை..

மாயை 3 :சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்தால் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெறலாம்..

எந்த பாடத்திட்டத்தில் படித்தாலும், தனியார் நீட் பயிற்சி மையங்களில் ஒரு ஆண்டோ, இரண்டாண்டோ, 2 லட்சம் ரூபாய்கள் தனியாக செலவழித்து படித்தால்தான் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க முடியும், மெரிட் இடங்களை பெற முடியும், இல்லையென்றால் கட் ஆப் மார்க் மட்டும் எடுத்து, டொனேஷன் கொடுத்து மேனேஜ்மென்ட் கோட்டா சீட்டில் சேரலாம்...

நிஜம் : 12.6 லட்சம் பேர் நீட் கோச்சிங் படித்திருந்தால், அதில் வெறும், 60 ஆயிரம் பேர் மட்டும் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைகிறது.. மீதமுள்ள 12 லட்சம் பேர் செலவழித்த தலா 2 லட்சம் ரூபாய்.. அதாவது மொத்தம் 24 ஆயிரம் கோடி ரூபாய் எள்ளு.. சரி, இதில் பாதியையே எடுத்துக்குங்க, நீட் மையங்களுக்கு 12 ஆயிரம் கோடி கொள்ளை லாபம்.. இதில் நீட் ஆதரவு மத்திய மாநில ஆட்சியாளர்களுக்கு எவ்வளவு பங்கு???

கருத்துகள் இல்லை: