ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

சீமானால் வஞ்சிக்கப்பட்டவர்கள் வாழ்விழந்தவர்கள் .இளமையை தொலைத்தவர்கள் பட்டியல்! .. தலை சுற்றும்!

Manoj Kumar : வெத்துப் பய சீமானும்,இத்துப் போன தமிழ் தேசிய சாமானும்.. 

 சீமானால் வஞ்சிக்கப்பட்டவர்கள்* சீமானால் வாழ்விழந்தவர்கள்* சீமானால் இளமையை தொலைத்தவர்கள்.

 அய்யோ இந்த கல்யாணசுந்தரமும்,ராசீவ் காந்தியும் எனக்கு துரோகம் பண்ணீட்டாங்க'னு நீலிக்கண்ணீர் வடிக்கும் சீமானால் கடந்த 11 ஆண்டுகளாக வஞ்சிக்கப்பட்ட இளைஞர்களின் பட்டியலை எல்லாம் பார்த்தால் நமக்கே தலை சுற்றும்,,, "எவன் வேணா போங்க,,என்ன எதிர்த்தா இது தான் கதி" என நாம் தமிழர் கட்சியை ஏதோ தனக்கான சொத்து போல ஆணவத்தோடும்,தலைகனத்தோடும் பேசும் சீமான் அவர்களே,,இந்த கட்சி ஒன்றும் உங்கள் ஒருவரால் துவங்கப்பட்ட கட்சி இல்லை,,,

2009 ஈழப்படுகொலையின் போது என்ன செய்வதென்று தெரியாமல் கையறுநிலையில் இருந்த பல பல இளைஞர்கள்,உணர்வாளர்கள் என அனைவரும் இணைந்து,,ஒரு கூட்டத்தலைமையாக இயங்கும் நோக்கோடு உருவாக்கப்பட்டது தான் நான் நாம் தமிழர் கட்சி,,,

இந்த காலகட்டத்தில் ராமேஸ்வரத்தில் பேசிய சீமானின் பேச்சு சன் டிவியில் ஒளிபரப்பாகி கொஞ்சம் பிரபலமாக இருந்தார் இயக்குனர் சீமான்,,, ஆக அந்த கூட்டுத்தலைமையில் அவரையும் ஒரு நபராக இணைத்துக் கொண்டு உருவாகியது தான் நாம் தமிழர் கட்சி,,,

(இன்று கூட சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் தானே ஒழிய, தலைவரோ,பொதுச்செயலாளரோ கிடையாது)

அதன் பிறகு 2010 ஆம் ஆண்டு மே 17 அன்று மதுரையில் நாம் தமிழர் கட்சி துவங்கப்பட்டது,,,

அன்று கட்சியை துவங்க முக்கிய பங்கு வகித்தவர்களில் இன்று எவருமே கட்சியில் இல்லை,,,,

உதாரணத்திற்கு கட்சியை துவங்க முக்கிய பங்கு வகித்தவர்களான,,,,

பேராசிரியர் தீரன்
புதுக்கோட்டை முத்துக்குமார்
வழக்கறிஞர்.நல்லதுரை
காரைக்குடி.தமிழ்ச்செல்வன்
தடா.ராசா
ஆவல்.கணேசன்
வழக்கறிஞர்.காமராசு
இசக்கி கார்வண்ணன்
இயக்குனர் சிபி.சந்தர்

என்ற இந்த வரிசையில் சமீபத்தில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள்,,,

வழக்கறிஞர்.ராசீவ் காந்தி
பேராசிரியர்.கல்யாணசுந்தரம்

மேற் கூறியவர்கள் எல்லாம் 2010 யில் கட்சி துவங்கிய நாளில் இருந்து இருந்தவர்கள்,,,கட்சி துவங்கவே காரணமாக இருந்தவர்கள்,,,ஆனால் இன்று ஒருவர் கூட அங்கே இல்லை என்றால் அதிலேயே சீமானின் யோக்கியதையை நம்மால் புரிந்து கொள்ள முடியும்,,,

(2010 க்கு பிறகு வந்து கட்சியில் இணைந்து உழைத்து அதன் பிறகு சீமானால் உழைப்பு சுரண்டப்பட்டு வஞ்சிக்கப்பட்டர்கள் பட்டியல் என தனியே எழுதலாம்,,,

இன்று தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களாக இருக்கும் தோழர் டைசன்,தோழர் இளமாறன் துவங்கி அய்யநாதன்,வியனரசு,மருத்துவர் பாரதிச் செல்வன் என இந்த பட்டியல் நீளும்)

அதே போல இந்த கட்சியை நம்பி வந்து பணமிழந்து,இளமை இழந்து,உழைப்பு சுரண்டப்பட்டு பிறகு சீமானால் சக்கையாக தூக்கி எறியப்பட்ட  மாவட்ட பொறுப்பாளர்களே ஒரு பெரும் பட்டியல் இருக்கும்,,,

சென்னை அதியமான்
காரைக்குடி கரு.காளிமுத்து
திருவண்ணாமலை பிரபாகரன்
ஈரோடு ஜெயராஜ்
சேலம் அருண்
திருச்சி ஜெயந்தி
தருமபுரி சிவக்குமார்
இராமநாதபுரம் நாகேசுவரன்
நாகப்பட்டினம் மாறன்
நீலகிரி எழில்ராசா
கன்னியாகுமரி சிதம்பரலிங்கம்
தேனி பிரபாகர முருகன்
விழுப்புரம் குமரேசன்
விருதுநகர் சந்திரா
திருப்பூர் பாலா
திருநெல்வேலி செந்தில்குமார்
கடலூர் ராஜசேகரன்,
சித்தநாதன்
தூதத்துகுடி பிரபு
நாயக்கல் பேரா.செந்தில்குமார்
காஞ்சிபுரம் துரைராசு
திண்டுக்கல் இளையராசா
பழனி காஜா மைதீன்
வேலூர் லெனின் பாலு
கிருஷ்ணகிரி மணிகண்டன்
திருவாரூர் தென்றல் சந்திரசேகர்
திருவள்ளூர் ஊமை அழகிரி
அரியலூர் முத்துக்குமார்
பெரம்பலூர் அருள்
கோயம்புத்தூர் ஆனந்தராசு
கோயம்புத்தூர் வழக்கறிஞர் சந்திரன்
கோயம்புத்தூர் குபேந்திரன்
கோயம்புத்தூர் நவீன்
மதுரை அம்பிகாபதி
புதுச்சேரி.செழியன்
மும்பை.அர்ச்சுணன்
மும்பை.ராஜேந்திரன்
பெங்களூர்.பிரபு
பெங்களூர்.கணேசன்

என தலை சுற்றும் அளவுக்கு இந்த பட்டியல்கள் எல்லாம் நீண்டு கொண்டே போகும்,,,

எனக்குத் தெரிந்து நூற்றாண்டு தமிழக அரசியல் வரலாற்றில்,,,,

ஒரு கட்சியில் இருந்து இத்தனை நபர்கள் வெளியேறிய,திட்டமிட்ட வெளியேற்றப்பட்ட அசாதாரண நிகழ்வுகள் நாம் தமிழர் கட்சியில் மட்டுமே நடந்துள்ளது,,,

இப்படி நாம் தமிழர் கட்சியை நம்பி வந்தவர்கள் அனைவருமே இந்த கட்சி தமிழர்களுக்கு ஏதோ மிகப் பெரிய நன்மை செய்யப் போகிற கட்சி என பெரும் கனவோடு வந்தவர்கள் தான்,,,

அப்படி வந்தவர்களின் கனவுகளை,,,இளமையை,,,பொருளாதாரத்தை,,,உழைப்பை அத்தனையையும் துளி மனசாட்சியில்லாமல் சுரண்டித் திரண்டு,,சக்கையாக தூக்கி எறிந்துவிட்டு,,,இன்று அதை தனது குடும்ப சொத்தாக மாற்றியுள்ளார் பச்சை துரோகி சீமான்,,,,

நீங்களே யோசிங்க,,,,

ஒரு கட்சியில் இருந்து இரண்டாம் கட்ட நபர்கள் ஒரு 3,4 பேர் வெளியேறலாம்,,,அது இயற்கையாக அனைத்துக் கட்சியிலும் நடப்பது தான்,,,

ஆனால் இவ்வளவு பெரிய பட்டியலை நீங்கள் எங்கேனும் கண்டதுண்டா ??

கட்சி் துவங்கிய நாளில் இருந்து உழைத்து,உழைத்து ஓடாய் தேய்ந்த இன உணர்வாளர்கள் எல்லாம் இந்த நபரின் வஞ்சக எண்ணத்தை கண்டு, மனதுடைந்து இனி இந்த பொது வாழ்வே வேண்டாம் என பெரும்பாலும் ஒதுக்கிக் கொண்டார்கள்,,,

தோழர் டைசன்,தோழர் இளமாறன் மட்டும் தான் தமிழர் விடியல் கட்சி என்ற கட்சியை துவங்கி நடத்துகின்றனர்,,,ஒரு காலத்தில் சீமானின் வலதுகரமாக இருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலைமை செயலாளர் ஆவல் கணேசன் அவர்கள் அய்யா நெடுமாறனோடு பயணிக்கிறார்,,,

இவர்களை தவிர்த்து மீதி அனைவருமே இந்த பொது வாழ்வில் இருந்தே ஒதுங்கிக் கொண்டனர்,,,

இது இந்த தமிழ் சமூகத்திற்கு எவ்வளவு பெரிய இழப்பு என எண்ணப் பாருங்கள்,,,

இத்தனை களப்போராளிகளை காயடித்துவிட்ட பெருமை இனத்துரோகி சீமானையே சாரும்,,,

2009 க்கு பிறகு இங்கே இன எழுச்சி ஏற்பட்டு விடக் கூடாது என்ற நோக்கில்,,,இந்திய உளவுத்துறையால் உருவாக்கி விடப்பட்ட சீமான் தனது வேலையை கச்சிதமாக செய்து முடித்துள்ளார்,,,

எவனெல்லாம் இன உணர்வோடு இருக்கிறானோ,அவனை எல்லாம் நாம் தமிழர் முகமிற்குள் வரவைத்து,,பின்னர் அப்படி வந்தவர்களை எல்லாம் காயடித்து வீட்டு அனுப்பி வைக்கும் வேலையை தான் சீமான் செய்து வருகிறார்,,,,

இனியேனும் குறைந்தபட்ச அறிவுள்ள இளைஞர்கள் இதையைல்லாம் கணக்கில் கொண்டு,,,தங்களது இளமையை,கனவை,பொருளாதாரத்தை இந்த இனத்துரோகியை நம்பி தொலைக்காமல் இருக்க வேண்டும்,,,

அதை நடக்காமல் தடுக்க வேண்டியது இன உணர்வாளர்கள் ஒவ்வொருவரின் கடமை,,,

இப்படிப்பட்ட பச்சை இனத்துரோகியை அம்பலப்படுத்தாமல் இருப்பது தமிழினத்திற்கு நாம் செய்யும் துரோகம் என்றே சொல்ல வேண்டும்,,,

"கல்யாணசுந்தரத்தையும்,ராசீவையும் தம்பிகனு நினைச்சு தோள்ல ஏத்துனேன்,,கடைசீல என் வாயிலயே மூத்திரத்த பேஞ்சுட்டானுக" சீமான் சமீபத்திய பேட்டியில் கூறினார்,,,

ஆனால் உண்மையில் நாம் தமிழர் கட்சியை நம்பி வந்த இத்தனை பேரின் உழைப்பை,பொருளாதாரத்தை,இளமையை சுரண்டி விட்டு,,அனைவரின் வாயிலும் மூத்திரத்தை பெய்தவர் மனிதநேயமிக்க சீமான் தான்,,,

Manoj Kumar

கருத்துகள் இல்லை: