
டி.ஆர்.பாலு
சென்னை: கடும்
எதிர்ப்புகளுக்கு மத்தியில் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட்
நுழைவுத் தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு நாடு முழுவதும் தொடங்கியது.
தமிழகத்தில் 14 நகரங்களில் நடைபெறும் தேர்வில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து
990 மாணவர்கள் பங்கேற்றனர். சென்னை, திருச்சி, சேலம், நெல்லை, மதுரை,
கோயம்புத்தூர், கரூர், திருவள்ளூர் , கடலூர், நாமக்கல் , காஞ்சிபுரம்,
வேலூர் , கன்னியாகுமரி , தஞ்சாவூர் ஆகிய 14 நகரங்களில் 238 தேர்வு மையங்கள்
அமைக்கப்பட்டன. உடல் வெப்ப நிலை பரிசோதனைக்கு பிறகு முககவசம் அணிந்த
மாணவர்கள் மட்டுமே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். பிற்பகல் 2 மணி
முதல் மாலை 5 மணி வரை நீட் தேர்வு நடைபெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக