திங்கள், 10 ஆகஸ்ட், 2020

மகனை தலை கீழாக கட்டி தாக்கிய தந்தை கைது ஆக்கிரா .. வீடியோ

       மின்னம்பலம் : ஆக்ராவில் சக கிராமவாசிகளின் முன்னிலையில் தன் மகனை கயிற்றால் தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டு தாக்கிய வீடியோ வைரலானதால் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.        விநாடிகள் கொண்ட ஒரு வீடியோ இணையத்தில் நேற்று (ஆகஸ்ட் 9) வைரலானது. அதில், ஒரு வீட்டின் ஜன்னலில், கயிற்றால் ஒரு சிறுவன் தலைகீழாகக் கட்டப்பட்டிருக்கிறான்.    அவனை கிராம மக்கள் முன்னிலையில் ஒருவர் தாக்குகிறார். இரக்கமின்றி அச்சிறுவன் தாக்கப்படுவதைக் கண்டு, கூட்டத்தில் இருந்த சிறுவன் அதிர்ச்சியடையும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.   

இதுகுறித்து மேற்கு ஆக்ரா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தபோது, “நான்கு நாட்களுக்கு முன், தன் மனைவியுடன் சண்டையிட்ட அந்த நபர், தனது சகோதரியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அவருக்கு மூன்று குழந்தைகள். அதில் மூத்த மகனை அவர் கயிற்றில் தலைகீழாகக் கட்டி தாக்கியுள்ளார். நாங்கள் அவரை விசாரிக்கிறோம். அவர் தனது குற்றத்தை இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை. இதுவரை குடிபோதையில் இந்தச் செயலைச் செய்துள்ளார்” என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

-ராஜ்

கருத்துகள் இல்லை: