ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

காஷ்மீரின் இன்றைய நிலை குறித்து விவரிக்கும் பிபிசியின் ஆவணப்படம் வீடியோ

காஷ்மீரின் இன்றைய நிலை குறித்து விவரிக்கும் பிபிசியின் சிறப்பு ஆவணப்படம் 55 நிமிடங்களுக்கு முன்னர் காஷ்மீரின் இன்றைய நிலை குறித்து விவரிக்கும் பிபிசியின் சிறப்பு காணொளி. மார்ச் 2015 இல், ஜம்மு-காஷ்மீரில் எதிரெதிர் சித்தாந்தங்களைக் கொண்ட பாஜக மற்றும் பிடிபி இணைந்து அரசமைத்தபோது, அது ஜனநாயகத்தில் ஒரு புதிய செயல்பாடாகப் பார்க்கப்பட்டது. ஜூன் 2018 இல், இந்தக் கூட்டணி உடைந்து, மாநிலம் மீண்டும் ஆளுநரின் ஆட்சியின் கீழ் சென்றது. 2018 டிசம்பரில் ஜனாதிபதியின் ஆட்சி இங்கு கொண்டுவரப்பட்டது.

ஜம்மு-காஷ்மீரில் தேர்தல்களை நடத்துவதற்கும் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கும் கோரிக்கை எழுந்தது. ஆனால், டெல்லியில் மற்றொரு திரைக்கதை எழுதப்பட்டது. பின்னர் திடீரென 5 ஆகஸ்ட் 2019 அன்று, ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து என்ற அரசியலமைப்புச் சலுகையை மத்திய அரசு ரத்து செய்து அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது

கருத்துகள் இல்லை: