வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

சோனியாகாந்தி! ஆர் எஸ் எஸ் குள்ள நரிகளின் வாலை பல தடவை ......

பாலகணேசன்ருணாசலம் : · இந்திரா காந்தியோ அல்லது ராஜீவ்

காந்தியோ அவர்கள் இயற்கையாக மணிக்கும் வரை ஆட்சி செய்திருந்தால் இந்தளவு இந்தியா முன்னேறியிருந்தி ருக்குமா...என்றால் சந்தேகமே?

.காரணம் அவர்களுடன் அட்டையாக ஒட்டிக் கொண்டிருந்த RSS கூட்டம் அவர்களை செயல்பட விட்டிருந்திருக்கமாட்டார்கள்..      சோனியா காந்தி காங்கிரஸ் தலைமை ஏற்றபிறகு காங்கிரஸில் இருந்த RSS கூட்டம் அவரை பிற்போக்குத்தனம் , பண்பாடு பாரம்பரியம் அது இது என அவரின் தலையில் மொளகா அரைத்து நாட்டை இருந்த நிலையிலேயே வைத்திருக்க முயன்றும் அது முடியவில்லை..

.RSS சித்பவன் கூட்டம் இந்திரா ராஜீவை அணுக முடிந்த அளவுக்கு சோனியாவை அனுகமுடியாது
அவர் ஒரு வெளிநாட்டுக்காரி என்று சங்கிகள் அவரை ஏளனம் செய்தது அந்த வெறுப்பில்தான்..இந்தியா பிற்போக்குத் தனத்திலிருந்து விடுதலை அடைந்ததும் வெள்ளைக்காரர்களாலேயே, இங்குள்ள ஏழைகளுக்கு தரமான வாழ்வு கிடைத்த தும் சோனியா காந்தி எனும் வெள்ளைக் காரியால்தான்..

நரசிம்மராவ் மன்மோகன் சிங் இன்னும் பல உலக அறிவு கொண்ட பொருளா தார அறிஞர்களின் ஆலோசனைகளுக்கு முட்டுக்கட்டை போடும் RSS நபர்களை ஆட்சி நிர்வாகத்தில் அண்ட விடாமல்   GO HEAD Tick அடித்து இந்தியாவை வளர்ந்த பொருளாதார நாடாக மாற்ற உதவினார்...

அதுமட்டுமல்லாமல் கம்யூனிஸ்ட்டுகள் கோரிக்கையான கிராம மக்களின் வறுமை நீக்கும் 100 நாள் திட்டத்தையும் செயல்படுத்தினார்...சிலர் அதை கம்யூனிஸ்ட் சித்தாந்த திட்டம் என்பார் கள்...பெரும்பான்மை பலத்துடன் இந்திரா ராஜீவ் காலத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்தில் செய்யமுடியா ததை சோனியா காந்தி காலத்தில்தான் அது நிறைவேறியது என்பதிலிருந்து நண்பர்கள் ஒன்றை புரிந்து கொள்ளுங் கள்...சோனியா காந்தி மாதிரி இன்னும் ஒரு நபர் நமக்கு கிடைக்க நாம் பெரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும்...

கலைஞர் ஸ்டாலினை உருவாக்கி வைத்திருப்பது போல் சோனியா காந்தி ராகுலயும் பிரியங்காவையும் மட்டுமல்ல ரகுராம்ராஜன் அப்ரஜித் பானர்ஜி போன் றவர்களையும் நாட்டுக்காக உருவாக்கி வைத்திருக்கிறார்...இந்தியாவின் எதிர்காலம் இன்னும் பிரமாதமாக இருக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது...

காவிகளின் தற்போதைய தப்பாட்டமும் ஒருவிதத்தில் நல்லதுதான்...ஏனெறால் ஒரு முறை அவர்கள் விரட்டப்பட்ட பிறகு மீண்டும் அவர்களை மக்கள் ஏற்றுக் கொள்ள விரும்பாத மனநிலையை அவர்கள் மோடி 2 ஆட்சிமூலம் விதைத்துக் கொண் டிருக்கின்றனர்

கருத்துகள் இல்லை: