சனி, 11 ஜூலை, 2020

வாடகை கேட்டவரை குத்தி கொன்ற பாஜக செயலாளர் சரவணன் .. நாச்சியார் கோயில்

பாஜக சரவணன்
Savukku Shankar : வாடகையா கேக்குற ? இந்தா வாங்கிக்க.
கும்பகோணத்தில், நாச்சியார் கோவிலில், ஶ்ரீ ஶ்ரீ 1008 சத்திய அபிநவ தீர்த்தர் பிருந்தாவனம் என்ற மடம் உள்ளது. இந்த மடத்தையும் அதன் சொத்துக்களையும் பிராமண ராயர் என்ற பிரிவை சேர்ந்த ஒரு பார்ப்பன குடும்பம் பல ஆண்டுகளாக நிர்வகித்து வருகிறது. இந்த குடும்பத் தலைவர், கோபாலன் 60 வயதை கடந்தவர். இவர்தான் இந்த மடத்தின் சொத்துக்கள் அனைத்துக்கும் பவர் ஆப் அட்டர்னி வைத்திருக்கிறார்.
மற்ற கோவில் சொத்துக்களை போலவே, இந்த மடத்தின் சொத்துக்களிலும் குடியிருப்பவர்கள் ஒருவரும் வாடகை கொடுப்பதில்லை. 22 வருடங்களாக வாடகையே கொடுக்காமல், பலர் ஏமாற்றி வருகின்றனர். மடத்தின் நிர்வாகி கோபாலன், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், வழக்கு தொடுக்கிறார். இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் உயர்நீதிமன்றம் வாடகை கொடுக்காத அனைவரையும் காலி செய்ய சொல்லி உத்தரவிட்டது. இதையடுத்து அனைவரும் காலி செய்தனர்.
இதில் மடத்தின் சொத்தில் டைலர் கடை வைத்திருந்தவர்தான் சரவணன். கடந்த 2014ம் ஆண்டு, மடத்தின் நிர்வாகி கோபாலனை டைலர் கடை வைத்திருந்த சரவணன் சந்தித்து, வழக்கை வாபஸ் பெறச் சொல்லுமாறு தகராறு செய்துள்ளார். அப்போது பதிவு செய்யப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், 30 ஜூன் அன்று, சரவணன், கோபாலன் வீட்டுக்கு வந்து, சாலையில் நின்று கொண்டிருந்த கோபாலனை மோசமான வார்த்தைகளால் திட்டி, கத்தியை வைத்து வெட்டியுள்ளார். இந்த சம்பவத்தை அவர் மகன் நேரில் பார்த்து காப்பாற்ற செல்வதற்குள், சரவணன் வெட்டி விட்டு ஓடி விட்டார்.
இதில் சரவணன் கோரிக்கை என்ன தெரியுமா. வாடகை கொடுக்காமல் 22 வருடங்களாக கடை வைத்து இருந்து விட்டு காலி செய்து விட்டேன். எனக்கு 2 லட்ச ரூபாய் கொடு என்பதே. கோபாலன் 22 வருடங்களாக வாடகை கொடுக்கவில்லையே. உனக்கு எதற்கு பணம் என்றிருக்கிறார்.
இதற்குத்தான் கொலை.
கொலை செய்த சரவணன் யார் தெரியுமா ? நாச்சியார் கோவில் பிஜேபி நகர செயலாளர்.
இந்த விஷயத்தை சங்கிகள், மதக் கொலை என்று பரப்பி வருகிறார்கள்.
படத்தில் ஜட்டியோடு இருப்பவர்தான், நாச்சியார் கோவில் பிஜேபி நகர செயலாளர் சரவணன். இவர்தான் கொலைக் குற்றவாளி.
சவுக்கு சங்கர்
1 ஜூலை 2020

கருத்துகள் இல்லை: