ஞாயிறு, 5 ஜூலை, 2020

மாணவி பவானி படுகொலை .. திருவண்ணாமலை விவசாய கல்லூரி

Thangaraj Gandhi : மருத்துவ கல்லூரியில் நீட் தேர்வில் கூட வென்று விடலாம். இந்த பாழாய் போன் மதுரை விவசாய கல்லூரியில் ஒரு சீட் கிடைப்பது
என்பது சென்னை ஐஐடி போல அரிதினும் அரிது. இங்கு சேர்ந்து படிக்க என்ன வழிமுறை என்றே வெளிப்படைத்தன்மை இல்லை.
இந்த நிலையில் அடுக்கப்பட்ட மூட்டையில் அடிமூட்டையாக தவிக்கும் அருந்ததியர் சமூகத்தின் ஆண்களெல்லாம் தடுமாறிச் செல்ல, எங்கோ ஒரு பெண் மாணவி பவானி அத்திப்பூத்தார் போல அந்த கல்லூரியில் பயின்று வந்த போது
மர்மமான முறையில் படுகொலை என்றால் என்ன காரணம் ரோகித் லெமுலா உள்ளிட்ட பட்டியல் இனமக்கள் எப்படி படியேறி வந்தாலும் கொன்றாவது தனது இரத்தபசியை தீர்க்கும் சாதிவெறி சனாதனவெறி தலைவிரித்தாடுவதைத் தவிர வெறென்ன.

தாமரை மயிரில் கூட மலராது என்று மார்தட்டி விட்டு...
இந்த பெரியார் மண்ணில் டெல்லி நேரு பல்கலைகழகங்களும், ஒருபுறம் தூத்துக்குடி போன்ற உ.பி.களையும் துளிர்விட்டு கொண்டுதான் இருக்கிறது.
சக்கிலிச்சி தானே என நந்தினியை போல கண்டு கொள்ளாமல் கடப்பது சமூகநீதியா?
#JusticeForBavani

கருத்துகள் இல்லை: