ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

எச்சரிக்கை : வீடுகளின் மின் விளக்கை அணைத்தால் மின் பாதையில் பழுது ஏற்படும்


news 18 tamil  :  நாளை இரவு 9 மணிக்கு வீடுகளில் எரியும் அனைத்து மின் விளக்குகளையும் அணைத்துவிட்டு, 9 நிமிடங்களுக்கு ஒளியேற்றப்பட்ட மெழுகுவர்த்தி, அகல் விளக்கு, டார்ச் லைட் அல்லது உங்கள் செல்போன் போனில் டார்ச் ஒளியை ஏற்ற பிரதமர் மோடி அறுவுறுத்தினார்.
இதுபற்றி இந்திய ராணுவம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாளை இரவு விளக்கு அல்லது மெழுகுவர்த்தி தீபம் ஏற்றும் முன்பு பொதுமக்கள் மிக கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் ஆல்கஹால் கலந்த சேனிட்டைசர்களை கொண்டு கைகளை தூய்மைப்படுத்துவதற்கு பதில் சோப்புகளை கொண்டு கை கழுவுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளது.
கைகளை தூய்மைப்படுத்த உதவும் ஹேண்ட் சேனிட்டைசர்களில் ஆல்கஹால் 60 சதவீதத்திற்கு மேல் இருப்பதால், எளிதில் தீப்பற்றக் கூடிய ஆபத்து இருப்பதால், இந்த அறிவுரையை இந்திய ராணுவம் வழங்கியுள்ளது.


Msrm Murugan : நாடு முழுவதும் தொழிற்சாலைகள் இயங்காத நிலையில், வீடுகளின் மின் விளக்கை அணைத்தால் மின் பாதையில் பழுது ஏற்படும் அதை சரிசெய்ய 12 முதல் 16 மணி நேரமாகும் என மகாராஷ்டிரா மின் துறை அமைச்சர் மிதுன் ராவ் அறிக்கை......
இதே கருத்தை தமிழக மின்துறை வல்லுனர்களும் சொல்கிறார்கள்.....மின் துறையில் பழுது ஏற்பட்டு அதை சரி செய்ய காலதாமதமானால் சில கொரோனா சிகிச்சை மையங்களும் பாதிக்கப்படலாம் ஆகையால் மின் விளக்கை அணைத்தாலும் வீட்டின் மற்ற மின் சாதனங்களை இயக்கத்தில் வைக்கவும் .......மின் துறை வல்லுநர்கள் வேண்டுகோள்.

கருத்துகள் இல்லை: