வியாழன், 9 ஏப்ரல், 2020

சுகாதார செயலரோ கொரோனா வைரசை பரப்பிய கொடுமை .. மத்திய பிரேதேசம் . பல்லவி ஜெயின்


இந்த அம்மா யார் தெரியுமா?
மத்தியப் பிரதேசத்தின் சுகாதாரத் துறைச் செயலாளர் பல்லவி ஜெயின்.
அதிகாரமும் செல்வாக்கும் இருந்தால் இந்த நாட்டில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இவருடைய மகன் வெளிநாட்டிலிருந்து வந்த செய்தியை இவர் மறைத்துவிட்டார்.
விளைவு? மகன் மூலமாக இவருக்கும் கொரோனா நோய் தொற்றிவிட்டது. என்றாலும் அந்த அறிகுறிகள் வந்த பிறகும் அலட்டிக்கொள்ளாமல் அரசு பணிகளைத் தொடர்ந்தார். மீட்டிங்குகள் நடத்தினார்.
இதனால் இன்று இவருடன் பணியாற்றிய சுகாதாரத் துறை மூத்த அதிகாரிகள் இரண்டு டஜன் பேருக்கு கொரோனா தொற்றிவிட்டது. இவரால் நோய்த் தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 100 இருக்கும் என அஞ்சப்படுகின்றது.
ஆனால் இந்த அளவுக்கு அலட்சியத்துடன் நடந்து கொண்ட இந்த அம்மையார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதற்கு மாறாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்குப் பதிலாக கெஸ்ட் ஹவுசில் தங்கியிருந்து சிகிச்சை பெற இவருக்க வசதி செய்து தரப்பட்டது.
அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின் செவிலியர்களின் பற்றாக்குறை இருக்கின்றது. ஆனால் படத்தைப் பாருங்கள், இவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக நிறைய பேர் திரண்டிருக்கின்றார்கள்.
விடுங்க, மேடம் தப்லீக் ஜமாஅத்தைச் சேர்ந்தவரா, என்ன?
-Azeez Luthfullah

கருத்துகள் இல்லை: