செவ்வாய், 7 ஏப்ரல், 2020

கொரோனாவால் மரணம் நிகழாத முதல் நாள் சீனாவில் பதிவானது - சர்வதேச நிலவரம் என்ன?

BBC : கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் நேற்று எந்த உயிரிழப்பும் நிகழவில்லை.
ஜனவரி மாதம் சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் கோவிட்-19 தொற்றால் உண்டான மரணங்கள் குறித்த விவரங்களை வெளியிடத் தொடங்கியது முதல், கொரோனா வைரஸ் காரணமாக மரணம் நிகழாத முதல் நாளாக நேற்று (திங்கள்கிழமை) உள்ளது என்று ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவிக்கிறது.

நேற்று சீனாவில் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்ட 32 பேரும் வெளிநாடுகளில் இருந்து அங்கு வந்தவர்கள்.
கொரோனா வைரஸால் 81,740 பேர் பாதிக்கப்பட்ட சீனாவில் 3,300க்கும் மேலானவர்கள் உயிரிழந்தனர்.
கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் தொழிற்சாலைகளின் இயக்கமின்றி அமைதி நிலவுகிறது. ஆனால், எல்லா மாவட்டங்களிலும் பகலிலும், இரவிலும் தையல் இயந்திரங்களில் வேலைசெய்யும் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

பிரிட்டன் பிரதமருக்கு தீவிர சிகிச்சை கொரோனா வைரஸ் அறிகுறி தீவிரமடைந்ததால் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். பிரிட்டன் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், வைரஸ் தாக்குதல் தீவிரமடைந்ததால் மருத்துவர்கள் ஆலோசனைக்குப் பிறகு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: