

இந்த நிலையில் திடீர் திருப்பமாக கொலை வழக்கில் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மதுரையில் உள்ள சீனியம்மாளை தொடர்பு கொள்ள முயன்றபோது அவர் நிருபர்களை சந்திக்க மறுத்துவிட்டார். அவரது கணவர் சன்னாசி தொலைபேசியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்பட 3 பேர் கொலை வழக்கில் எனது மகன் கார்த்திகேயன் மீது அபாண்டமாக பழி சுமத்தப்பட்டுள்ளது. அரசியல் தூண்டுதல் காரணமாகத்தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கார்த்திகேயன் நிரபராதி என்பதை சட்டப்படி நிரூபிப்போம். பொறியியல் பட்டதாரியான அவனுக்கு ஆந்திராவில் வேலை கிடைத்துள்ளது. வருகிற 1-ந்தேதிக்கு பிறகு வேலைக்கு செல்ல திட்டமிட்டு இருந்த நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளான்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக