புதன், 31 ஜூலை, 2019

விகடன் திமுகவின் டாப் 5 ஊழல் என கட்டுரை... ஊடக விபசாரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு

ஆலஞ்சியார் : விகடன் திமுகவின் டாப் 5 ஊழல் என கட்டுரை
வெளியிட்டிருக்கிறது .. ஏற்கனவே நிறைய விவாதித்து கேள்வி கேட்டவன் தண்ணீர் குடிக்கிற அளவிற்கு விளக்கம் தந்தும் இன்னமும் வீராணம் ஊழல், பூச்சிமருந்து ஊழல் மேம்பால ஊழல்
2ஜி என தோல்வி கண்ட வழக்குகளை குற்றசாட்டுகளை பேசி மடைமாற்ற முயல்கிறது விகடன் ...
திமுகமீது திமுக தலைமை மீது தொடர்ந்து சொல்லபட்டுவரும் குற்றசாட்டுகளில் பிரதானமாக ஊழல்கட்சி விஞ்ஞானபூர்வ ஊழல் என்பதுதான் .. உண்மையில் விஞ்ஞானபூர்வமென்றால் தெளிவை பெறுவதில் சிக்கல் இருக்காது நிரூபணம் செய்ய எளிதாகும்.. விஞ்ஞான பூர்வம் என சொல்லபட்டு அரைநூற்றாண்டை கடந்து இன்னமும் புலனாய்வுதுறை வளர்ச்சியடையவில்லை போலும்
உண்மையில் எந்தவொரு குற்றசாட்டும் தனிமனிதனை வெகுவாக பாதிக்கும் அதிலும் பொதுவாழ்வில் என்றால் கேட்கவே வேண்டாம் ஊடகங்கள் திரும்ப திரும்ப சொல்லி குற்றம் சாட்டபட்டவரை நிரூபிக்கபட்ட குற்றவாளியாகவே ஆக்கிவிடுவார்கள் அதுதான் கலைஞருக்கு நடந்தது ஆ.ராசாவிற்கும் நடந்தது .. ஆனால் இரண்டுபேரும் ..ஒரு குற்றசாட்டை கூட நிருபிக்கமுடியாமல் விடுதலையானர்கள் என்பது தான் உண்மை ..

..
ஏன் இந்த வன்மம் 2ஜி விடயத்தில் ஜூனியர் விகடன் தொடர்ந்து ராசாவை பற்றி புலனாய்வு செய்து வெளியிட்டதாக கூறி அவதூறுகளை வெளியிட்டது எல்லை மீறவே உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இனி வெளியிட கூடாதென்று தடை வாங்கினார் .. 2ஜி வழக்கில் நீதிபதியே ஏழுவருடம் ஏதாவது ஒரு ஆதாரத்தை கொண்டுவந்து தரமாட்டார்களா காத்திருந்தேன்
கடைசிவரை வாய்தா வாங்கினார்களே தவிர ஆதாரத்தை சமர்பிக்க முடியவில்லை அனுமானங்களை வைத்து தண்டிக்க முடியாதென்று தெளிவாக தீர்ப்பு எழுதிய பிறகும் இன்னமும் 2ஜி என்பதிலிருந்து எந்தளவு வன்மம் கொண்டிருக்கிறார்களென அறியலாம்
..
கலைஞரை சிலர் கெட்டவர் போலவும் ஊழல் திருட்டு என கதை சொல்கிறார்கள் ஆனால் எம்ஜிஆரையோ ஜெயலலிதாவையோ இவர்கள் பேசுவதில்லை கல்வி கொள்ளைக்கு வழிவகுத்த .. நீராதார நிலைகளை எல்லாம் கல்வி நிறுவனங்கள் ஆக்ரமிக்க வழிவகுத்தவர் .. சாராய அதிபரோடு பேரம் பேசி ஆட்சி நடத்தியவர் இங்கே நல்லவர் .. மக்கள் பணத்தை கொள்ளையடித்து அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி சொத்து சேர்த்து உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கபட்டு சிறை சென்றவர் தியாக திருஉருவமாக நம்பகபடுத்துகிறது ஊடகங்கள் .. விடுதலை இந்தியாவின் முதல் ஊழல்வாதி .. அதற்காக பதவியையே பறிகொடுத்தவர் டி.ட்.கிருஷ்ணமாச்சாரி .. ஆனால் இவர்கள் எல்லாம் பார்பனர்கள் என்ற காரணத்திற்காக தப்பு செய்து தண்டிக்கபட்டவர்களை கூட மறந்தும் செய்தியாக்குவதில்லை ..
..
உண்மையில் கலைஞர் "அறம்வெல்லும்" என நம்பினார் துரோகங்களாலும் எதிரிகளின் சூழ்ச்சியாலும் தொடர்ந்து வேட்டையாடபட்டாலும் உண்மை நிலைக்கும் என நம்பினார் அது நடந்தது எந்தவொரு வழக்கிலும் திமுக மீது குற்றம் சுமத்தியவரகளால் எதுவும் செய்யமுடியவில்லை
ஆனாலும் பார்பன கயமை பழைய அறுந்த ரீலை ஓட்டபார்க்கிறது .. திமுக மீதும் திமுகவினர் மீதும் பழி சுமத்தலாமென்ற
அவர்கள் எண்ணம் ஈடேறாது
..

கருத்துகள் இல்லை: