வியாழன், 7 மார்ச், 2019

ஒரே நாளில் மொத்த மானத்தையும் வாங்கிய பிரேமலதா - சுதீஷ்


வெப்துனியா : நாடாளுமன்ற தேர்தலுக்கான தேமுதிக - அதிமுக கூட்டணி இன்னும் முடிவாகமல் இழுபறியில் உள்ளது.
இந்த கூட்டணிக்காக பிரேமலதாவும், சுதிஷூம் செய்யும் செயல்களால் கேப்டன் அப்டெட்டில் உள்ளாராம். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகியுள்ளார், கட்சி பணிகளை அவரது மனைவி பிரேமலதாவும், சுதீஷூம் கவனித்து வருகின்றனர். இவர்கள் எடுக்கும் பல முடிவுகளால் தேமுதிக தொண்டர்களே அதிருப்தியில் உள்ளனர். அதிமுகவிடம் 7 தொகுதிகளை கேட்டது தேமுதிக இதற்கு அதிமுக தரப்பு சம்மதிக்காததால், இதனை பயன்படுத்திக்கொள்ள நினைத்த திமுக அவர்களுடன் கூட்டணி குறித்து பேசியது. அதுவும் ஒத்துவராத நிலையில் திமுக, தேமுதிகவுடன் கூட்டணி இல்லை என முடிவு செய்து ஒதுங்கியது.
இதன் பின்னரும் அதிமுக - தேமுதிக கூட்டணி தொகுதி பங்கீடுகள் இழுபறியிலேயே பல நாட்களுக்கு நீடித்தது. நேற்று மோடி தமிழகம் வந்துள்ள நிலையில் தேமுதிகவின் கூட்டணி குறித்து முடிவு எடுத்துவிட வேண்டும் என அதிமுக உறுதியாக இருந்தது.

ஆனால், தேமுதிகவின் முக்கிய தலைகள் திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து துரைமுருகன், தேமுதிக தரப்பில் சுதீஷ் போன் செய்து, அதிமுக கூட்டணியில் இருந்து விலகி திமுகவில் இணைய விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால் திமுக வழங்குவதற்கு சீட் இல்லை என மறுத்துவிட்டாதாகவும் கூறினார். சுதீஷ் துரைமுருகன் கூறிய இந்த செய்தியை ஒப்புக்கொண்டார்.

உண்மையில் விஜயகாந்திற்கு அதிமுகவுடன் கூட்டணி வைக்க விருப்பமில்லை என்ற தகவலும் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. ஆனால், இப்போது அதிமுகவை விட்டால் தேமுதிகவிற்கு எந்த கட்சியும் கூட்டணிக்கு இல்லை.
சுதீஷின் அர்சியல் நாகரீகமற்ற சில செயல்களால் தேமுதிக பெரும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. இதனால் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அப்செட்டில் உள்ளார் என நெருங்கிய வட்டார தகவல் தெரிவிக்கின்றன. <

கருத்துகள் இல்லை: