சனி, 9 மார்ச், 2019

ஜெயலலிதாவின் 13,000 கோடி பெறுமதியான 2,00,000 காரட் .. மும்பை வைர மார்க்கெட் ஆட்டம் கண்டது ..

SURAT: Prices of the +11 diamond size manufactured by the small and medium diamantaires in the Surat — world’s largest diamond cutting and polishing centre — has crashed by nearly 30% in the last two days after the diamond brokers in Mumbai were flooded with the fresh stocks from few brokers in Tamil Nad
Surat: Prices of +11 diamonds crash after stock from Tamil Nadu flood Mumbai market
V Jeyaganapathi : இனறு மாலை எனக்கு கிடைத்த ஒரு செய்தி, உள்ளபடியே #Demonitisation சமயத்தில் மும்பை சந்தையில் வாங்கியுள்ளார், அன்றைய தமிழக முதல்வர் #ஜெயலலிதா." (ஆதாரம் கடைசியில் உள்ளது.)
என்னை மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
அது இதுதான், "13,000 கோடி பெருமானமுள்ள 2,00,000 காரட் வைரத்தை திமுக ஆட்சியில் ஊழல், திமுக ஊழல் கட்சி, கலைஞர் ஊழல்வாதி, என்று சொல்லி சொல்லியே கடந்த 40 வருடங்களாக தமிழகத்தை கொள்ளையடித்தது யாரென்று பார்த்தால், #அதிமுக, எம்ஜிஆர், ஜெயலலிதா, சசிகலா, தினகரன் , அதிமுக முன்னாள்/இந்நாள் அமைச்சர்கள், MLA க்கள், MP க்கள், முதல் உள்ளாட்சி பிரதிநிதிகள் வரை இவர்கள் தான்.
"வாய் புளித்ததோ மங்காய் புளித்ததோ" என்று சொல்லவில்லை. 30 வருடங்களுக்கு முன்னர் எம்ஜி அமைச்சரவையில் இருந்த #காளிமுத்து 35 லட்சம் அன்றைய கணக்கில் ஊழல் செய்ததாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் தீர்ப்பு வந்தது. பல்கேடியா கப்பல், எரிசாராய ஊழல் என்று எம்ஜி ஆட்சியில் தொடங்கி, விசாரணைக்கு முன்பே அவர் மறைந்து, அதன் பின்னர் வந்த ஜெயலலிதா கொள்ளையடித்து குவித்த சொத்துகளை மீட்க, வழக்கு போட்டு, அவர் தண்டனை பெற்றது வரை, பல பல அதிமுக அமைச்சர்கள் செய்த ஊழல்களும் பெற்ற தண்டனைகளும் கண்கண்ட சாட்சிகள்.

அதுவே இந்த 40 ஆண்டுகாலமாக ஊழல்வாதி என்று இவர்கள் கூப்பாடு போட்டு கூவிய, கலைஞர் மீதோ, அவர் குடும்பத்தார் மீதோ, ஒரேயொரு ஊழல் வழக்கு நிலுவையிலேனும் உள்ளதா, என்றால் இல்லை.
"அவர்கள் ஊழல் செய்ய பழகியவர்கள்" என்று உங்கள் பொய்களுக்கு அலங்காரம் கொடுக்க பொய் சாக்கு சொல்ல வேண்டாம். #இந்திரா முதல் எம்ஜி வரை, லேடி முதல் மோடி வரை எதிர் அரசியல் செய்தும் அவர்களால் ஒரேயொரு ஊழல் கூடவா கலைஞர் மீது கண்டுபிடிக்க முடியவில்லை.?
எனதருமை தமிழ் மக்களே. இப்பார்ப்பன பொய் மூட்டைகளை, புளுகு மூட்டைகளை, இன்னும் எத்தனை காலம் தான் நம்ப போகிறீர்கள்? சுரா பானம் (மது) அருந்தாத #அசுரர் (அ+சுரர்) குலம் காக்க வந்த, நம் தமிழ் மன்னர்கள் எத்தனையோ பேரை தீயவர்களாக, கட்டுக்கதை பரப்பிய பார்ப்பன தந்திரம், இருபது நூற்றாண்டு முன்னர் முதல், 21ம் நூற்றாண்டு வரை தொடர நாம் அனுமதிக்கலாமா?
சிந்திப்பீர் மக்களே..!! சிந்திப்பீர் ...!!!
வைரம் வாங்கியதற்கான ஆதார செய்தி : https://t.co/pm28P2rdIx

கருத்துகள் இல்லை: