வியாழன், 26 ஜூலை, 2018

ராகுல்: பாஜக ஆர் எஸ் எஸ் ஐ தோற்கடிக்கும் வல்லமை உள்ள எவரையும் பிரதமாராக ஏற்போம்

பாரதிய ஜனதா மற்றும் RSS-ஐ தோற்கடிக்கும் வல்லமை பொருந்திய யாரையும் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் ஏற்கும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
2019 தினமணி :மக்களவை தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிடுவதற்கு ஆதரவு அளிப்பதாக தேவெ கௌடா தெரிவித்தார்.
2019 மக்களவை தேர்தலில் வலுவான பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ் பிராந்தியக் கட்சிகளுடன் கூட்டணி வைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிடுவதற்கு பிராந்தியக் கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிக்குமா என்ற சந்தேகங்கள் கிளம்பி வருகின்றன. 
இந்நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் தேவெ கௌடா ராகுல் காந்திய பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணியில் ஆட்சி நடந்து வருகிறது. 
இந்நிலையில், தேவெ கௌடா இந்த தகவலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தில்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 'மக்களவை தேர்தலிலும் காங்கிரஸ் - மதச்சார்பற்ற கூட்டணி தொடரும். ராகுல் காந்தியை பிரதமர் பதவிக்காக மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவு அளிக்கும்' என்றார்.
ஆனால், மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் தொகுதி பங்கீடு குறித்து கருத்து தெரிவிக்கவில்லை

கருத்துகள் இல்லை: