சனி, 28 ஜூலை, 2018

ட்ராபிக் ராமசாமி : கலைஞர் என்ற இளைஞருக்கு ஒன்றும் நிகழாது ... 100 வயதுக்கு மேல் இருப்பார்

100 வயதுக்கு மேல் இருப்பார் இந்தியாவில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டுத்தான் எது வேண்டுமானாலும் நடைபெறுமே ஒழிய அவருக்கு எதுவும் நடக்காது. மக்கள் நம்பிக்கையுடன் இருங்கள்.
இளைஞருக்கு எதுவும் ஏற்படாது சென்னை: கருணாநிதி எனும் இளைஞருக்கு ஒன்றும் நிகழாது என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தெரிவித்தார்.
கருணாநிதிக்கு கடந்த 24-ஆம் தேதி முதல் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு வீட்டிலேயே மருத்துவமனையில் உள்ள வசதிகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
24 மணிநேரமும் ஒரு மருத்துவரும் செவிலியர்களும் கருணாநிதியை கவனித்துக் கொண்டனர். டிரக்கியாஸ்டமி கருவியை மாற்றியதால் சிறுநீரகத்தில் நோய் தொற்று ஏற்பட்டு கருணாநிதிக்கு காய்ச்சல் ஏற்பட்டதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.< உடல்நலம்< இதுபோல் நேற்றைய தினம் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியும் கோபாலபுர இல்லத்துக்கு வருகை தந்தார். அப்போது ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

 இளைஞருக்கு எதுவும் ஏற்படாது< பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் கருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லை என்று வதந்தியை பரப்பிக் கொண்டிருந்தார்கள். உண்மையிலேயே அந்த இளைஞருக்கு எதுவும் ஏற்படாது.
மக்கள் நம்பிக்கையுடன் இருங்கள்







மக்கள் நம்பிக்கையுடன் இருங்கள்

இந்தியாவில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டுத்தான் எது வேண்டுமானாலும் நடைபெறுமே ஒழிய அவருக்கு எதுவும் நடக்காது. மக்கள் நம்பிக்கையுடன் இருங்கள்.







100 வயதுக்கு மேல் இருப்பார்

தமிழகத்தில் நடைபெறவுள்ள அரசியல் மாற்றத்தை அவர் தன் கண்களால் பார்த்து வாழ்த்து தெரிவிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. வீண் வதந்திகளை யாரும் பரவ வேண்டாம். என்னைவிட இன்னு்ம 100 வயதுக்கு மேல் அவர் இருப்பார் என நினைக்கிறேன் என்றார்.

கருத்துகள் இல்லை: