செவ்வாய், 24 ஜூலை, 2018

அருந்ததியர் உள் ஒதுக்கீடும்- சமூகநீதியும் .. நீட் தேர்வும் - மனுநீதியும்

Ezhilan Naganathan : அவினாசி பாளையத்தில் நான் கண்ட முத்து
தோழர் பாப்பமாள் போராட்டதிற்கு ஆதரவு தெரிவிக்க சென்ற போது தோழர் பாப்பமாள் அவரது சித்தப்பா பெண் கோகிலாவை அறிமுகப்படுத்தினார்..
கோகிலா தான் அங்கு வசிக்கும் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம்.. ஆண்டு ஆண்டு காலமாக சாதிய கட்டமைப்பால் கழிவு அகற்றும் தொழில் அவர்கள் மேல் திணிக்கப்பட்டுள்ளது ..
2000 ஆண்டுகள் திணிக்கப்பட்ட தொழிலில் இருந்து விடுபட்டு... கோகிலா முதல் தலைமுறை மாணவியாக இன்று கோயம்பத்தூர் அரசாங்க மருத்துவ கல்லூரி மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார்....பாப்பமாள் நடத்தும் போராட்டத்தில் முன் நின்று .. களப்பணி ஆற்றி .. மக்களை ஒருங்கிணைத்து வழி நடத்துகிறார் ..
கோகிலாவிடம் உரையாற்றிய போது..
சார் அருந்ததியர் உள் ஒதுக்கீடு இல்லை என்றால் நான் மருத்துவராக வாய்ப்பு இருந்திருக்காது.. இப்போது உள்ள நீட் தேர்வு இருந்திருந்தால் நான் மருத்துவராக வாய்ப்பு இருந்திருக்காது ...

என்னை பார்த்து பல மாணவிகள் மருத்துவர் ஆகலாம் என்று இருந்தினர் .. அவர்களின் கனவு நீட் தேர்வு முறையால் அகற்றப்பட்டது ‌‌..
மேற்படிப்பு என்ன படிக்க போற என்று கேட்டேன்
சார் ..முதல்ல அரசாங்க வேலை . குடும்பம்..சுற்றி சமூகத்தை காப்பாற்றனும்.. பிறகு மகப்பேறு சிகிச்சையில் மேற்படிப்பு படிக்க வேண்டும் ...
சமூகநீதி போராட்டத்தின் விதைகள் .. விளைவுகள் மக்களின் அடிமை சங்கிலிகள் உடைத்து உயர்த்தும் அணிகளாக இருக்கிறது... அதுவும் போராட்ட வடிவமாக திகழ்கிறது ...
"Intangible effects of social justice program of Tamil nadu"
சமூகநீதி காவலர்கள் .. நம் முன்னோடிகளின் தொலைநோக்கு பார்வை கண்டு வியந்தேன்...
சமூகநீதி கொள்கை பாதுகாப்பது
அதை நேரடியாகவோ மறைமுகமாகவோ தகர்க்கும் சதிகளை உடைப்பது நம் கடமை என்று உணர்ந்தேன் ...
இன்று அனிதா..பிரதிபா .. கோகிலா போல் மருத்துவ மாணவிகளா இருந்து இருப்பார்கள்... விளம்பு நிலை மக்களின் மருத்துவராக வலம் வந்திருப்பார்கள்..
அதை தடுக்கும் மனுதர்மம் மட்டுமே நம் பிரதான ஒரே எதிரி

கருத்துகள் இல்லை: