
இம்ரான்கானின் பிடிஐ கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றும், அதிக இடங்களில் முன்னிலை வகித்தும் வருகிறது.
இதனால் இம்ரான்கான் பிரதமராக உள்ளதாக அறியவருகிறது.
இந்நிலையில், சிந்து மாகாணத்தில் உள்ள தார்பார்கர் தொகுதியில் பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட இந்து மதத்தை சேர்ந்த மகேஷ் மலானி வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம், அந்நாட்டு பாராளுமன்ற தேசிய சபை (கீழ்சபை) தேர்தலில் போட்டியிட்டு வென்ற முதல் இந்து என்ற பெயரை அவர் பெற்றுள்ளார்.
இதற்கு
முன்னர், பல இந்து எம்.பி.க்கள் தேசிய சபையில் இருந்தாலும் அவர்கள்
அனைவரும் நியமன எம்.பி.க்கள் ஆவர். தற்போது, மகேஷ் மலானி தேர்தலில் நின்று
வெற்றி பெற்று தேசிய சபைக்குள் செல்ல இருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக